நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று சூரியோதயப் பொழுதில் -
ஈசன் எம்பெருமானின் கட்டளைப்படி , மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் கங்கை கலப்பதாக ஐதீகம்..
இதனால் காவிரி நதி தீரம் முழுதுமே மேலும் சிறப்புறுகின்றது..
இப்படிக் கலக்கின்ற கங்கை - துலா மாதம் எனும் இந்த ஐப்பசி மாதம் முழுதும் காவிரியுடன் கலந்திருந்து கார்த்திகை முதல் நாள் மாலைப் பொழுதில் விடை பெற்றுக் கொள்கின்றாள்..
காவிரி நதியில் இந்த ஐப்பசி
மாதம் முழுதும் நீராடுவதை மிகுந்த புண்ணியமாகக் கொள்கின்றனர் மரபு சார்ந்த மக்கள்.
காவிரி நதிக் கரையிலுள்ள சிவ வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஐப்பசி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..
நாமும் மங்கல நீராடி புண்ணியப் பலன்களை எய்துவோம்..
காவிரியாள் வாழ்க
கங்கா தேவி வாழ்க!
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**
காவிரிப் பெண்ணே வாழ்க
பதிலளிநீக்குகாவிரிப் பெண்ணே வாழ்க
உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க
தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்
குளித்தாய்
திரும்பிய திசை எல்லாம் பொன்னடி
குவித்தாய்} நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய் உன் அரும் கணவன் கங்கையை
அணைத்தே
கன்னிக் குமரியையும் தன்னுடன்
இணைத்தான் ஆயினும் உன் நெஞ்சில் பகை
ஏதும் இல்லை
அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
' கற்பு என்பது சொல் திறம்பாமை ' - ஔவையார்..
நீக்குதங்கள் வருகையும்
அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காவிரியோடு கங்கை இணையும் ஐப்பசி மாதத்தின் முதல் நாளைய வாழ்த்துகள்.
எப்போதுமே காவிரியில் நீராடுவது சிறப்பென்றால், இம் மாதத்தில் நீராடுவது எத்தனை சிறப்பானது எனபதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இரண்டு புண்ணிய நதி அன்னைகளும், தங்களை அண்டி வரும் தங்கள் குழந்தைகளை சீரோடும், சிறப்பும் காத்து அவர்களின் வாழ்வை வளமாக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
பிரார்த்தனையும்
மகிழ்ச்சி
நன்றியம்மா