நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 31, 2025

மணியே

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை


மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24
-: அபிராமி பட்டர் :-


உணர்ச்சி மயமான

காணொளிக்கு நன்றி


பாடலின் வரிகள் தெரியும்.. 
எனினும்
 நன்றி: ஸ்ரீராம்..

பாடல் கவியரசர்
இசை K.V. மகாதேவன்

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ

பதில் சொல்லடி அபிராமி..

நில்லடி முன்னாலே முழு
நிலவினைக் காட்டு 
உன் கண்ணாலே 
சொல்லடி அபிராமி..

பல்லுயிரும் படை த்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ

நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 

இந்த சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ..

சொல்லடி அபிராமி..

வாராயோ 
ஒரு பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ..

வானம் இடிபடவும்
பூமி பொடி படவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே 

கொடிகள் ஆட 
முடிகள் ஆட குடிபடை 
எழுந்தாட வரும் கலை அழகே

பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர
மத்தளமும் சத்தமிட
வாராயோ ஒரு
பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ

செங்கயல் வண்டு
கலின் கலின் என்று 
ஜெயம் ஜெயம் என்றாட 
இடை சங்கதம் என்று 
சிலம்பு புலம்பொடு 
தண்டை கலந்தாட 

இரு கொங்கை கொடும் பகை வென்றனம் 
என்று குழைந்து குழைந்தாட

மலர் பங்கயமே 
உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட 
விரைந்து வாராயோ 
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி 
கண்களில் தெரிகின்றாள் 
கண்கள் சிவந்திடும் வண்ணம் 
எழுந்தொரு காட்சியும் தருகின்றாள்

வாழிய மகன் இவன் வாழிய 
என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் 

ஓம் சக்தி ஓம்
**

1 கருத்து:

  1. பாடலின் பின்பகுதிதான் இன்னும் இன்னும் ரசிக்க வைக்கும்.  தாளம் போடவைக்கும்   கண்ணதாசன் அருமையாக எழுதி இருப்பார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..