நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
பொதுவாக சிவாலயங்களின் திருவிழா மரபுகள் எப்படி இருப்பினும் கந்த சஷ்டிக்கு அடுத்த நாள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது..
அந்த வகையில் இன்றைய
திருப்புகழ்..
இப்பாடலின் தொடக்கத்தில் தேவகுஞ்சரியும் நிறைவில் வள்ளி நாயகியும் குறிப்பிடப்படுகின்றனர்..
திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள் காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள் காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள் காண்
மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள் காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள் காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள் காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள் காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
கௌமாரம்
நாளும் ஒலிப்பேழையில்
கேட்டு மகிழ்கின்ற பாடல் இது.
ஓம் சிவ சுப்ரமண்யாய
**



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..