நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 21, 2023

ஒரு கேள்வி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு கேள்வி!..



தமிழனின் நிலை இப்படியிருக்க,



தமிழ்நாட்டிற்குள் -
தொழிலாளர்கள் என்ற போர்வையுடன்
பங்களாதேஷிகள் மேற்கு வங்கத்தின் வழியாக கள்ளக் குடியேறிகளாக வருகின்றார்களாம்
ஆதார் அட்டையுடன்!..


 காணொளி
நன்றி: தினமலர்

விழிப்புணர்வு
காணொளிக்கு நன்றி


" சோம்பித் திரியேல் "
என்றார் ஔவையார்..

எத்தனை எத்தனையோ
புண்ணியர்களாலும் 
புண்ணியங்களாலும் 
புகழிடமாய் 
விளங்குகின்ற 
தமிழகம் - இன்றைக்குப்
புல்லர்களின் 
புகலிடமாய் ஆகிக் 
கொண்டிருக்கின்றது..

என்ன செய்யப்
போகின்றோம்?..
***

16 கருத்துகள்:

  1. புகழிடம்!!  புகலிடம் என்பதற்கு கூட அர்த்தம் தெரியாத நியூஸ் கம்பாசிட்டர்கள்!  காணொளிகளை பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இப்படி சிறுமைப் பட்டுப் போனது சமீப காலமாகத் தான்..

      ஆனாலும் இப்படியும் வைத்துக் கொள்ள்ளாலாம்

      எத்தனை எத்தனையோ புண்ணியங்களால் புகழிடமாய் விளங்கும் தமிழகம் புல்லர்களின் புகலிடமாய் ஆகிக் கொண்டிருக்கின்றது..

      இந்த கருத்து பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. எந்த ஜமாத்தில் அவர்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறார்களோ அந்த ஜமாத் பொறுப்பாளர்களுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை என்று இருந்தால் போதும். நம் வீட்டில் பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுத்தால் நமக்கு பாரதரத்னாவா கொடுப்பாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான கயவர்களுக்கு அப்படியான பட்டங்களைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

      இது டமிள் நாடு ஆயிற்றே!..

      ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள ஊர் யாருக்கோ சொந்தமாக ஆனது போல
      எதுவும் நடக்கலாம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. சிந்தை மறந்து போன தமிழன்.
    இரண்டாவது காணொளி இயக்கமில்லை.

    பதிலளிநீக்கு
  4. செம்மை மறந்து போன தமிழன்.

    அன்றைக்கே மகாகவி சொல்லி விட்டார்..

    காணொளி இங்கு இயங்குகின்றது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி ஜி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. பிழைக்க வழி தேடி வருகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். நம் மக்கள் படித்து வெளிநாடு சென்று விட்டார்கள். வேலைக்கு ஆள் இல்லை , வருவோரை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கோணத்தில் கருத்து.. ஆனால் இங்கே வருபவர்கள் கள்ளக் குடியேறிகள்.. தஞ்சை மாவட்டத்து வயற்காட்டில் இறங்கி விட்டார்கள்..

      இந்திய பாஸ்போர்ட், ஆதார் கார்டில் நுழைந்திருக்கின்றனர்..

      சிந்திக்க வேண்டிய விஷயம் இது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. ஒவ்வொரு நாட்டிலும் இதுதான் நடக்கிறது இல்லையா அண்ணா? இப்படி ரொம்ப ஈசியாக நுழைபவர்கள் மேற்கத்திய நாடுகளிலும் புலம்பல்கள் இருக்கிறதே...அங்கு நுழையும் நம்மவரையும் கூடச் சொல்வதுண்டுதான்....கள்ள பாஸ்போர்ட் விசா ஆவணங்களுடன்....ஆனால் அங்கு கடுமையான விதிகள் என்பதால் சதவிகிதம் குறைவாக இருக்கிறது

    நம் நாட்டிலோ? இப்படி நம் நாட்டின் பாஸ்போர்ட் ஆதாருடன் நுழைய அதிகாரிகள் அல்லது ஏஜண்டுகளின் உதவி இல்லாமல் நுழைவது கடினம்....அவர்கள் நுழைவது என்பதை விட இப்படி போலியாக ஊடுருவலில் ஆபத்து அதிகம்.

    நீங்க இத்தனை வருடங்கள் இருந்த நாட்டில் இப்படிக் குடியேறிவிட முடியுமா அண்ணா? உடனே பிடிச்சு சிறையில் போட்டுட மாட்டாங்களஆ?

    ஆனா இங்கு எல்லாமே சர்வ சகஜம்.. எந்த சட்ட விதிகளும் வலுவாக இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இங்கு எல்லாமே சர்வ சகஜம்.. எந்த சட்ட விதிகளும் வலுவாக இல்லை..//

      சட்ட விதிகள் வலுவாக இருந்தாலும் இற்றுப் போகும்படிக்கு செய்து விடுவார்கள்..

      தங்கள் கருத்துரைக்கு தனிப் பதிவே தரலாம்..

      அது வேறொரு சமயத்தில்!...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. இரண்டாவது காணொளி நன்று நல்ல கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் மீள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. வெங்கோலன் இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கோலன் பெயரைச் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும்..

      வெங்கோலனோ செங்கோலனோ
      கள்ளக் குடியேறிகளான
      வங்கதேஷிகள் நாட்டின் அமைதிக்கு ஆபத்தானவர்கள்..

      அதிக விவரம் வேண்டும் எனில், அரபு நாடுகளில் உள்ள உங்கள் நண்பர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..