நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 24, 2024

சரணம் சரணம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 8
சனிக்கிழமை


தாயே தந்தை என்றும்  தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன்  நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ்  விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே..1028

மானேய் கண் மடவார்  மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்  திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029

குலம் தான் எத்தனையும்  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம் தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1031

தெரியேன் பாலகனாய்  பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின்  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம்பொழில் சூழ்  கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன்  அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

நன்றி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

ஓம் நமோ வேங்கடேசாய 
***

7 கருத்துகள்:

  1. பெருமாளே ஏன்னை மட்டுமல்ல,  எல்லோரையும் காப்பாத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமாளே..
      கோவிந்தா..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. பிரபந்த பாடலை பாடி வேங்கடவனை வணங்கி கொண்டேன்.
    காணொளி வரவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே நல்க எனது பிரார்த்தனைகளும். காணொளி மெதுவாக பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..