நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 24, 2020

வெள்ளி மணி 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று மங்கலகரமான நாள்..

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - திருவையாறு
ஊழிகளின் தொடக்கத்தில் -
புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..

ஸ்ரீநீலாயதாக்ஷி

திருமயிலை ஸ்ரீ கற்பகவல்லி நாகை ஸ்ரீ நீலாயதாக்ஷி
திருச்சி ஸ்ரீ மட்டுவார்குழலி, திருஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி, இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தனி

- என தமிழகம் எங்கும் அம்பிகைக்கு சிறப்பான வைபவங்கள் திருக் கோயிலின் உள்ளேயே நிகழ்கின்றன..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
திருவையாற்றில் - ஐயாறப்பருடன் இனிது உறையும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகிக்கும் ஆடிப்பூர விழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..

நாளும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன..

ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய அம்பிகை - இரவில் ரிஷபம், சேஷம், கிளி, காமதேனு - என வாகனங்களில் வீதி வலம் கண்டாள்.

ஆடிப்பூரத்தன்று - திருத்தேரில் பவனி வருகின்றாள்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
முந்தைய ஆண்டின் திருவிழாப் படங்கள் இவை..
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அபிராமவல்லி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-

அன்னை ஸ்ரீ காந்திமதி
நெல்லையில் ஆடிப்பூர வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்புடன் நடைபெறுவது..

திருவிழாவின் நான்காம் நாளன்று நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம்..



வளையல்கள் மற்றும் மங்கலங்களைச் சமர்ப்பித்து - காந்திமதியம்மனை பக்தர்கள் வழிபடுவர்.

திருவிழாவின் பத்தாம் நாள் அம்மன் சந்நிதியின் முன்னுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கொட்டு வைபவம்...

இந்த வைபவங்கள் எல்லாம் தற்போது நிலவும் சூழ்நிலையால் திருக்கோயில் வளாகத்திலேயே நிகழ்கின்றன..

நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மையின் திருக் கோலங்கள் நெல்லை பக்தர் பேரவையினரால் வெளியிடப்பட்டவை..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
மங்கலங்களுடன் மங்கலமாக -
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..







ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவிழாவின் ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்ட்ம்.. 

அன்றைய தினம்- ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம்...

வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியைத் தரிசிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள்வது வழக்கம்....

அந்த கோலாகலம் எல்லாம் இனி வரும் ஆண்டுகளில் தான்...

ஆடித் தள்ளுபடி!..
அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!.. 
-  என அலைவோர் மத்தியில் - ஐயனையும் அம்பிகையையும் 
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு...

சூழ்நிலையை அனுசரித்து
பழைய பதிவு ஒன்றினை ஒழுங்கமைத்து
இன்று வெளியிட்டுள்ளேன்...

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

16 கருத்துகள்:

  1. ஆடி மாதமே சிறப்பு.  அதில் ஆடிப்பூரம் இன்னும் சிறப்பு.  இருந்த இடத்திலிருந்து இன்று காலை இப்போது எத்தனை ஊர்கள் தரிசனம் எனக்கு...  நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      அன்னையின் அருள் எங்கும் பொலிவதாக..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பல ஊர்களின் சிறப்பு தரிசனங்களும் கிடைத்தன. பகிர்தலுக்கு நன்றி. மதுரையிலும் முளைப்பாரி உற்சவம் அமர்க்களமாக நடைபெறும். இப்போது ஆடி வீதிக்குள்ளாகவே நடைபெறுகிறது. முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இப்போவும், இங்கேயும் அருமையான தரிசனத்துக்கு நன்றி. இன்று ஆண்டாளின் திருநக்ஷத்திரம் என்பதால் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அடுத்த வருஷமாவதுஎல்லாக் கோயில்களிலும் எப்போதும் போல் விழாக்கள் நடக்க கடவுள் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அடுத்த வருடம் எல்லா விழாக்களும் செம்மையாக நடைபெற வேண்டும் என வேண்டிக் கொள்வோம்...
      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  3. ஆடிப் பூரம் - சிறப்பான தரிசனம் உங்கள் தளம் மூலம் காணக் கிடைத்தது.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே விளையட்டும்..

      நீக்கு
  4. நல்ல தரிசனம் கிடைத்தது இன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே வாழ்க..

      நீக்கு
  5. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் தரிசனம் கிடைத்தது! கூடவே நெல்லை கோமதியம்மன் என்று பல தரிசனங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  6. மதுரை முளை கொட்டு திருவிழா படங்கள் உறவினர்கள் அனுப்பினார்கள்.
    அம்மன் கோவில்களில் கொடியேற்றம் நடைப்பெற்று திருவிழா நடைபெறும்.
    இன்று எல்லா கோவில் அம்மன்கள் தரிசனம் கிடைத்தது, மகிழ்ச்சி.

    இத்தனை வருடங்கள் வளையல் வாங்கி அம்மனுக்கு கொடுத்து , அங்கு உள்ளவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம், சட்டைத்துணி வாங்கி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்வோம்.
    இந்த வருடம் கடைக்கு போக முடியவில்லை, கோவிலுக்கு போக முடியவில்லை.
    வீட்டில் கூழ் செய்து அம்மனுக்கு படைத்து, வீட்டில் உதவி செய்பவருக்கு கொடுத்து அந்த அளவு திருப்தி பட்டுக் கொண்டேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      எனக்கும் மீனாக்ஷியம்மன் படங்கள் வந்தன.. அத்தனையையும் பதிவேற்ற இயலவில்லை...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    ஆடி வெள்ளியின் சிறப்பான பதிவு கண்டு மகிழ்ந்தேன். மிக அழகான படங்களுடன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். அனைத்து ஊர் கோவில்களின் அம்மன் தரிசனங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை தந்தன. நெல்லை ஸ்ரீ காந்திமதியை தங்கள் பதிவு மூலமாக தரிசனம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..