நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்
ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.. 38
எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
கந்தரனுபூதி
நன்றி கௌமாரம்
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியும் அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும்
என் கண்ணுற்றதே..
-: திரு அருட்பா :-
ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள் தமது நித்ய வழிபாட்டின் போது தணிகாசலத் திருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் தரிசித்தார்..
அச்சமயம் பாடிய பாடல்களில் ஒன்று..
ஓம் சிவ சுப்ரமண்யாய
**


முருகன் மூவுலகையும் காக்கட்டும். முருகா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
முருகா சரணம்
தொடரும் கந்த சஷ்டீ பகிர்வுகள் படித்து இன்புறுகிறோம். நன்றி.
பதிலளிநீக்குகந்த சஷ்டி ஐந்தாம் நாளில் திருத்தணிகை தணிகாசலமூர்த்தியை பாடல்கள் பாடி வணங்கினோம்.
ஓம் தணிகாசலனே சரணம்.
தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா
முருகா சரணம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சஷ்டியின் ஐந்தாம் நாள் பதிவும், பாடல்களும் அருமை. முருகப்பெருமானை தரிசித்துக் கொண்டேன். பாடல்களை பாடி மகிழ்ந்தேன். வள்ளலார் சுவாமிகள் பெற்ற அருளை எண்ணி மனமுருகி மனக்கண்ணில் கண்டு வழிபட்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்