நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே. 22
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
கந்தரனுபூதி
வசனமிக வேற்றி ... மறவாதே
மனதுதுய ராற்றி ... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
இகபரசெள பாக்ய ... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
பழநிமலை வீற்ற ... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்
ஓம் சிவ சுப்ரமண்யாய
**


முருகா எமை காத்தருள்வாய்.
பதிலளிநீக்குதங்கள் வருகையும் அன்பின் பிரார்த்தனையும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
முருகா சரணம்
"வசனமிக வேற்றி மறவாதே.....
பதிலளிநீக்குஇத் திருப்புகழ் படிக்கும்காலத்தில் பாடுவோம் இப்பொழுது உங்கள் பகிர்வில் பாடி வணங்கினோம். நன்றி.
பாடசாலை சிறுவர் நிகழ்ச்சியில் பேரன் கார்த்திகைப் பெண்களுள் ஒருவராக நடனம் ஆடினார்.
ஓம் முருகா சரணம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும்
மேல் விவரமும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய கந்த சஷ்டி பதிவும் அருமை. கந்தரனுபூதி, திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் இனிமை. ராஜ அலங்காரத்தில் முருகன் படம் கண்களை கவர்கிறது. முருகனை பணிந்து அனைவரும் நலமாக வாழ வேண்டிக் கொள்வோம். முருகா சரணம். 🙏.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்குமூன்றாம் நாள் பழனி
தங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்