நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 04, 2025

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 21 
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
கதிர்காமம்


தானதன தானத் ... தனதான

மாதர்வச மாயுற் ... றுழல்வாரும்
மாதவமெ ணாமற் ... றிரிவாரும்

தீதகல வோதிப் ... பணியாரும்
தீநரக மீதிற் .. றிகழ்வாரே

நாதவொளி யேநற் ... குணசீலா
நாரியிரு வோரைப் ... புணர்வேலா

சோதிசிவ ஞானக் ... குமரேசா
தோமில் கதிர்காமப் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர்:-


பெண்களின் வசப்பட்டு
உழல்பவர்களும், சிறந்த தவ வழியை 
நினைக்காமல் வீணே திரிபவர்களும்,
தீமை விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும்,
கொடிய நரகத்திலே 
கிடப்பவர் ஆவார்கள்.


ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே,
நற்குண சீலனே

தேவயானை வள்ளி என இரு
தேவியரை மணந்த வேலவனே
சிவஞான ஜோதியைத்
தந்திடும் குமரேசனே..

குற்றமற்ற கதிர்காமத்தில்
உறைகின்ற பெருமாளே..


முருகா
முருகா

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. கண்டி கதிர்காமப் பெருமானைத் தொழுது உய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. திருப்புகழ்பாடி வணங்கினோம்.

    ஓம் கதிர்காமக் கந்தா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..