நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
திருப்புகழ்
ரத்தினகிரி
தத்தனா தானனத் ... தனதான
தத்தனா தானனத் ... தனதான
பத்தியால் யானுனைப் ... பலகாலும்
பற்றியே மாதிருப் ... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ... கருள்வாயே..
உத்தமா தானசற் ... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ... கிரிவாசா
வித்தகா ஞானசத் ... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ... பெருமாளே..
- அருணகிரிநாதர் -
பக்தியெனும் அன்பினால் நான் உன்னைப் பல வழிகளிலும் பற்றிக் கொண்டு -
உயர்ந்து விளங்குகின்ற திருப்புகழைப் பாடி முக்தனாகும் வழியிலே சிவகதியில் சேர்ந்து நான் உய்வடைவதற்கு திருவருள் புரிவாயாக..
உத்தமமான குணங்களுடன்
கூடிய நல்லவர்களிடம் நெருங்கி இருப்பவனே
ஒப்பில்லாத பெருமை உடைய ரத்னகிரியில் வாழ்பவனே ஞான வித்தகனே... திருவருள் ஞானத்தை நெஞ்சில் பதியச் செய்பவனே..
வெற்றி தரும் வேலாயுதத்தைத் திருக்கரத்தில் கொண்ட பெருமாளே..
நன்றி கௌமாரம்
முருகா முருகா
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..