நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 11, 2023

திருக்குடமுழுக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 25
திங்கட்கிழமை

நேற்று (10/9) ஞாயிறன்று தஞ்சை கீழவாசல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாகிய ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயிலுக்கு காலை 9:05 மணியளவிலும்

ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ வைத்ய நாதர் திருக்கோயிலுக்கு காலை 9:05 மணியளவிலும் திருக்குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது..

கூட்ட நெரிசலில் சரியாக படமெடுக்க இயலவில்லை.. இடையில் வல்லடி வழக்காக வாய்த் தகராறு வேறு..

இக்கோயில்களைப் பற்றிய மேல் விவரங்கள் மற்றும் படங்கள் அடுத்து வரும் பதிவுகளில்..

இவ்விரண்டு கோயில்களும் ஒரே பகுதியில் அருகருகே இருக்கின்றன.. 

இக்கோயில்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்ற (3/9) ஞாயிறன்று திருக்குடமுழுக்கு நடத்த்ப்பட்டு விட்டது.. அக்கோயிலில் படங்களும் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன..

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாகிய 
ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்








ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்










ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய
 ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயில்







இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-
**
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. கோவில் படங்களை ரசித்தேன்.  கொஞ்சம் சிறிய கோவில் போல தெரிகிறது.  கூட்டம் நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கோயில் படங்கள் அனைத்தும் அழகு. திரௌபதி அம்மன் என்றால் மகாபாரதக் கதை திரௌபதியா? கண்ணகி கோயில் என்று இருப்பது போன்றா? இதுவும்?

    யம்மாடியோவ் கூட்டம் அதிகம் போலத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மகாபாரத திரௌபதி தான் மூலவர்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  3. கோவில் திருக்குடமுழுக்கு படங்கள் எல்லாம் அருமை.
    அரவான், பஞ்சபாண்டவர்கள் எல்லோரும் திரெளபதி கோவிலில் இருப்பது சிறப்புதான். மாயவரத்தில் திரெளபதி அம்மன் கோவில் இவர்கள் எல்லாம் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் திரௌபதி அம்மன் கோயில்கள் வேறு சில இடங்களிலும் அமைந்துள்ளன..

      கும்பகோணத்திலும் திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளன..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..