நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 27, 2023

கங்கையிற்..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13
சனிக்கிழமை


பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே  ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!.. 873

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் 
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை 
இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா 
கோயில் கொண்ட 
கரும்பினைக் கண்டு கொண்டு என்கண் 
இணை களிக்கு மாறே.. 888


கங்கையிற் புனிதமாய காவிரி 
நடுவு பாட்டு 
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் 
அரங்கம் தன்னுள் எங்கள் 
மால் இறைவன் 
ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் 
ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும் 
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே.. 895


போதெல்லாம் போது கொண்டுன் 
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேன் 
அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே 
என் செய்வான் தோன்றி னேனே!. 897
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ரங்கா.. ரங்கா
ஓம் ஹரி ஓம்
***

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் வருகையும் வணக்கமும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கங்கையிற் புனிதமாய.... நடுவு பாட்டு - நடுவுப் இல்லை
    வெள்ளநீர்..... கள்வனார் கிடந்தவாறும் - கள்ளனார் இல்லை
    போதெல்லாம்... - என் செய்வான் தோன்றினேனே - ஞ் வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம் செய்து விட்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அரங்கன் பெருமை சொல்லும் பதிவு..... அனைவருக்கும் அரங்கன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அனைவருக்கும் அரங்கன் அருள் புரியட்டும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட் ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பாடல்கள் அருமை. ஸ்ரீரங்கநாதனை துதித்துப் போற்றி தரிசனம் செய்து கொண்டேன். அனைவரையும் ஸ்ரீரங்கநாதன் நலமாக வைத்திருக்க பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவரையும் ஸ்ரீரங்கநாதன் நலமாக வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. திரு அரங்கனை பிரபந்த பாடலை பாடி வணங்கி கொன்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. பச்சைமால் மலைபோல் மேனி துதித்து வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  8. அரங்கன் பற்றிய பதிவு அருமை. நேற்றே வாசித்துவிட்டேன். கருத்து போடும் போது வெளியிடுவதில் பிழை பிழை என்றே சொன்னது...அதன்பின் வர முடியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..