நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 24, 2022

திரு மணிக்குன்றம் 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திவ்ய தேசமாகிய
தஞ்சை மாமணிக்கோயில்



ஸ்ரீ அம்புஜவல்லி
உடனாகிய
ஸ்ரீதேவி பூதேவி
சமேத
ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாள்
திருக்கோயில்
மஹாஸம்ப்ரோக்ஷணம்


கடந்த திங்களன்று
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளின் திருக்கோயிலின்
மஹா சம்ப்ரோக்ஷணம் மங்கலகரமாக நிறைவேறியது..



யாக சாலையில்
பட்டாச்சார்யார்கள் பலர்
திருக் கைங்கர்யம் செய்தாலும் மனதில் நின்ற இருவரை இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்..

ஸ்ரீ பாலாஜி சேங்காலிபுரம்

ஸ்ரீ நந்தகோபால்
கலியபெருமாள் கோயில்





அதற்குப் பின் 
தொடர்ந்து -
உபயதாரர்களுக்கும்
காவல்/ தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கும்
இசைக் கலைஞர்களுக்கும் திருக்கோயில்
பணியாளர்களுக்கும் தேவ கைங்கர்யத்தில் ஈடுபட்ட அன்பர்களுக்கும் பெருமாளின்  வஸ்த்ர பிரசாதம் வழங்கப் பெற்றது.. 

என் மகன் திருக்கோயில் பணியில் தன்னார்வலனாக இருந்தமையால் சிறப்பித்து வாழ்த்தப் பெற்றான்.. 


ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் அவர்களுடன் என் மகன்

அந்த அளவில் எளியேனுக்கும் வஸ்த்ரப் பிரசாதம் அளிக்கப்பட்டது..


அதற்கான காரணத்தை
என்னால் உணர்ந்து கொள்ள இயலவில்லை..

பெருமாள் ஒருவரே அறிவார்!..


என்ன புண்ணியம் செய்தனை மனமே!..

மாமணிக் குன்றனின் மலரடி போற்றி போற்றி!..

ஓம் ஹரி ஓம்
***

19 கருத்துகள்:

  1. கொடுத்து வைத்தவர்(கள்)...  மகனும் ஆன்மீக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சேங்காலிபுரத்தில்தான் நான் என் குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும்போது தங்கியிருந்து மகன்களுக்கு முடி இறக்கி மொட்டை போட்டது.   அப்பா அங்கு பெரும்பான்னையூரில்தான் இருந்தார்.  குடவாசலில் படித்தார் என்று நினைவு.  சேங்காலிபுரத்தில் இன்றும் ஒரு உறவினர் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகையும் கருத்தும்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள் அருள் உங்களால் எங்களுக்கும் தூவப்பட்டிருக்கிறது.  நன்றி.  அனைவரையும் அவர் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. உங்கள் மகனுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. என்றும் சிறக்கட்டும் ஆன்மீக வழி...
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நான் அந்தப் படத்தில் இருப்பது நீங்கள் என்று நினைத்தேன் முதலில் அதன் பின் தெரிந்தது அது உங்கள் மகன் என்று. அவருக்கும் இதில் ஈடுபாடு இருப்பது மிகபெ பெரிய விஷயம். வாழ்த்துகள். இறைவனின் அருள் கிடைத்திடட்டும். மகனும் உங்களைப் போல இருப்பது மகிழ்வான விஷயம்.

    படங்களும் பதிவும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் எல்லாம் மிக அருமை.இறைவனின் புகழ்பாடும் உங்களுக்கு பிரசாதம் கிடைக்காமல் இருக்குமா? அதுவும் மகனும் அந்த கோயிலில் தன்னார்வலராக இருந்து இறை பிரசாதம் பெற்று இருக்கிறார். உங்கள் இருவருக்கும் மணிக்குன்றப் பெருமாள் எல்லா நலங்களையும், வளங்களையும் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. உங்கள் மகனும் பக்தி வழியிலேயே சென்று கொண்டிருப்பதும் மனதுக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மனமார்ந்த நல்லாசிகள். என்றென்றும் மணிக்குன்றத்துப் பெருமான் அருளால் பிரகாசமான வாழ்க்கையை அடையட்டும். எல்லாப் படங்களும் மிக அருமை. சம்பத் பட்டாசார்யார் என்றதும் எங்க ஊர்க் கோனேரி ராஜபுரத்து பட்டாசாரியாரோ எனப் பார்த்தேன். அவர் இல்லை. இவர் இன்னும் இளையவராக இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      பெரியோர்களாகிய தங்களது வாழ்த்தினைப் பெறுவதற்கு என் மகன் புண்ணியம் செய்தவன்..

      தங்களது அன்பும் ஆசியும் மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..

      நீக்கு
  10. பக்திமார்க்கத்தில் தொடர்ந்து இயங்க வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..