நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 24, 2020

மார்கழி முத்துக்கள் 09

 தமிழமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற..(034) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 09 

கமலவல்லியும் அழகிய மணவாளனும்
- உறையூர் பங்குனிச் சேர்த்தி -
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணைமேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!.. 
***
தித்திக்கும் திருப்பாசுரம்

உறையூர் ஸ்ரீ கமலவல்லி
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
தருமனையே நோக்கும் ஒண்தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு..(2148)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஎறும்பூர்


இறைவன் - ஸ்ரீஎறும்பீசர் 
அம்பிகை - அருள்மிகு நறுங்குழல் நாயகி

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்


தேவர்கள் எறும்பின் வடிவாக 
ஈசனை வழிபட்ட திருத்தலம்..
திருச்சி மாநகருக்கு அருகில் உள்ளது.
*** 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

அம்மையும் அப்பனும் - திருஎறும்பூர்
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்புரிந்து அருள் செய்தஎம் அங்கணன்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே..(5/74) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 09 

ஸ்ரீ தாயுமான ஸ்வாமி - ஸ்ரீ மட்டுவார்குழலி
திருச்சிராப்பள்ளி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..
***

திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 07 - 08


அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாமும் 
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னமும் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!.. 7

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. காலை எழுந்து வந்த உடன் குறள், மற்றும் பாசுரங்கள் படிக்க வைத்து விடுகிறீர்கள்.  நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய மார்கழி தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மேற்கண்ட அனைத்து தலங்களுக்கும் சென்றுள்ளேன். பாடலடிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான அமுதம்! தரிசனம் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல அருமையான தரிசனம். பாசுரங்கள், பதிகங்கள் பகிர்வுக்கு நன்றி. வேடிக்கை என்னவென்றால் உறையூருக்கு மட்டும் நாலைந்து முறை போயிருக்கேன். வெக்காளி அம்மனைப் பல முறை தரிசிச்சிருக்கேன். ஆனால் இன்னமும் கமலவல்லியைப் போய்ப் பார்க்க முடியலை. அதே போல் திருவெறும்பூரும்! உய்யக்கொண்டான் மலையும் போனதில்லை. எப்போவோ போயிருக்கணும். இப்போ அங்கெல்லாம் ஏற முடியுமா சந்தேகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இப்படித்தான் நானும்... வெக்காளி அம்மன் திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது தான் நாச்சியார் திருக்கோயில் என்பதை அறியாது இருந்திருக்கிறேன்..

      திரு எறும்பூர் திருக்கோயிலுக்கும் சென்றதில்லை.. ஆனால் உய்யக் கொண்டான் மலைக் கோயிலைத் தரிசித்திருக்கிறேன்... சிறிய மலை தான்.. தங்களுக்கு இயலும்.. வாய்ப்பு கிட்டும் போது தரிசனம் செய்யுங்கள்..

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  6. இங்கே நல்ல தரிசனம் கிடைச்சது. ஒருமுறைக்கு இரு முறைகள் பார்த்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. திருவெறும்பூர் காணக்கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அன்புடையீர்...
    தங்களது முதல் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..