நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 15, 2020

பொங்குக பொங்கல்

அனைவருக்கும்
அன்பின் இனிய
தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!..


அது ஏன் இன்றைக்கு பொங்குவது மட்டும் பொங்கல்!?..

அதே அரிசி.. அதே வெல்லம் தானே!..

ஏனென்றால் -
இன்றைக்கு தான் அபிராம பட்டர் சொல்வது போல -

சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான
சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்த!...

அந்த இறைவனுக்கு அல்லது இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள்..

இறைவனுக்கோ அல்லது இயற்கைக்கோ
நன்றி செலுத்துவது என்றால் எப்படி?..

இறைவனுக்கும் இயற்கைக்கும்
ஒருவாய் பொங்கச் சோறு ஊட்டி விடுவதா?..

அதுவல்ல..

இயற்கையுடன் இணைந்து திகழும்
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்!.. - என்று நினைப்பது!..

இது தான் பொங்கல்!..

இதைத் தவிர வேறெதுவும் பொங்கல் அல்ல!..


மார்கழி இருபத்தேழாம் நாளன்று
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் வைத்தனளே -

அது தான் பொங்கல்!...

சூடகம், தோள்வளை, தோடு, செவிப் பூ, பாடகம் 
மேலும் புத்தாடை - இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..

முழங்கை வழியாக வழியும் 
புத்துருக்கு நெய்யினால் மூடப்பெற்ற 
பாற்சோற்றை கூடி இருந்து 
உண்டு மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்தோம்!..

கூடி இருந்து குளிர்ந்தோம்!.. - என்கின்றாள்...

இன்னார் - இனியார்.. - என்ற பேதம் ஏதும் இல்லாமல்
எல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்து -

இது எங்கள் வீட்டுப் பொங்கல்!.. இது எங்கள் வீட்டுப் பொங்கல்!... - என்று

ஒருவருக்கொருவர் மீதூறிய அன்புடன் அளவளாவி
உண்டும் உண்பித்தும் கொண்டாடுவதே பொங்கல்!..

நிறைந்த பொங்கலுடன் மஞ்சள் இஞ்சி வாழை செங்கரும்பு
இவற்றுடன் இயன்ற அளவிலான காய்களும் கனிகளும் படைத்து

எல்லாரும் நல்லா இருக்க வேணும்!.. - என்று,
நெஞ்சில் அன்பு பொங்கிட கைகூப்பி நிற்கும் நாளே நன்னாள்..

அந்நாளே தை முதல் நாள்!..

நெய் தவழும் பாற்சோற்றை எடுத்து
உண்டால் நெய் தான் கையில் வழியும்!..

நெய் தவழும் பாற்சோற்றை
அடுத்தொருவர்க்கு ஊட்டி விட்டால் 
நெய் மட்டுமல்ல - நெஞ்சில் கருணையும் சேர்ந்து வழியும்!..

அதைத் தான் கோதை நாச்சியாள் செய்தனள்...

புல்லையும் பாடினாள்.. பூக்களையும் பாடினாள்..
நீள்நிலத்தைப் பாடினாள்...நெடுவானைப் பாடினாள்..

கார்முகிலைப் பாடினாள்... கடுமழையைப் பாடினாள்.. 
கதிர் நிலவைப் பாடினாள்.. கோள்களையும் பாடினாள்.. 

நெற்கதிரைப் பாடினாள்.. நெடுவயலைப் பாடினாள்..
கண் வண்ணம் பாடினாள்.. கயல் வண்ணம் பாடினாள்..

அல்லியைப் பாடினாள்.. ஆம்பலையும் பாடினாள்..
கரிக்குருவியைப் பாடினாள்.. கவிக்குயிலையும் பாடினாள்...

கன்றினையும் பாடினாள்.. கார் எருமையைப் பாடினாள்..
பால்பசுவைப் பாடினாள்.. படர் நெய்யைப் பாடினாள்..

அரசனையும் பாடினாள்.. அடியனையும் பாடினாள்.. 
ஆண்மையையும் பாடினாள்.. பெண்மையையும் பாடினாள்..

தூங்குதலைப் பாடினாள்.. மொழி வாங்குதலைப் பாடினாள்...
வாழ்தலையும் பாடினாள்.. வளர்தலையும் பாடினாள்..

பாடுபொருள் நீ என்று பரமனையே பாடினாள்...
பரந்தாமன் தோள்களிலே மாலை தனைச் சூடினாள்..

அவள் பாடிய பாடல்களின் வழியே -
அறிவு எனும் புத்தரிசியை அன்பு என்னும் வெல்லத்துடனும்
பரிவு எனும் பாலுடனும் கனிவு எனும் நெய்யுடனும் 
கலந்து பொங்கல் செய்தனள்..

அந்தப் பொங்கலைத் தான் 
தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்தனள்...

அது கண்டு தெய்வம் கனிந்தது...
மாலையாய் மார்பினில் ஏற்று மகிழ்ந்தது...

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நமக்களித்த வழியில்
திருப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்..


தைப் பொங்கல் வாழ்க.. 
தமிழ்ப் பொங்கல் வாழ்க!...


வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
***    

19 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி வாழ்க லளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  2. சிறப்பான விளக்கங்கள்.   சுவாரஸ்யமானதும் கூட.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
      வாழ்க நலம்..

      நீக்கு
  3. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு
  6. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அந்தக் கவிதையெல்லாம் கொஞ்சம் பழசு தான்...

      புதிய பதிவுகளுக்கு சூழ்நிலை சரியாக அமையவில்லை..

      வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. அன்பு துரை,
    இனிய பொங்கல் என்றும் கிடைக்க
    அன்பு வாழ்த்துகள். தை வந்து நன் மகள் நம் ஆண்டாளை அழகாக
    அருமையாகக் கொண்டாடினீர்கள்.
    தமிழால் நம் நெஞ்சம் சேர்ந்த பாசுரங்கள்
    பூர்த்தியாகித் தன் தலைவனையும்
    அடைந்தாள்.
    மானுட முயற்சியில் கடவுளைக் கணவனாக
    அடைந்த ஒரே ஒரு மானிடப் பெண்.

    முயற்சியும் கடவுள் கடைக்கண் பார்வையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்
    என்பதே நம்க்குக் கிடைக்கும் பாடம்.

    என்றும் வளம் திகழ வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஆண்டாள் அருளிய திருப்பாவையிலிருந்து நாம் கொள்ளத்தக்கவை அநேகம்...

      தங்களது கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பொங்கும் மங்களம் எங்கும் தங்க இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  10. பொங்கல் திருநாள் வாழ்த்துகள். அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. எளிமை, இனிமை!

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு விளக்கம்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..