நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 28, 2019

அழகு.. அழகு 6

 ஊரெல்லாம் ஒரே பரபரப்பா இருக்கு...

அப்படியான செய்திகள்...
இப்படியான செய்திகள்...

எல்லாவற்றையும்
கண்டும் கேட்டும் படித்தும் தலை முழுக்க கிறுகிறுப்பு...

 இதுகளுக்கு இடையில கொஞ்சம் போல கலகலப்பு...

திருமிகு.. தி. த.. அவர்களுக்கு.. இரண்டு வார்த்தைகள் வந்திருக்கின்றன...

எல்லாருக்கும்
சுரங்கத் துறை தான் வேணுமா?.
.
பொழுதும் போயிடுச்சு..
கூட்டணிக்கு யாரும் கூப்பிடலையே...
ஒனக்கு ஒரு சீட் கூட கொடுக்கலையா?...
எங்களையும் பார்த்து போடுங்கம்மா ஓட்டு!..
நம்மையும் மிஞ்சிட்டாங்களே!...
கலை நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பு..
ஜூஸ்.. ந்னு கொடுத்தானுங்க..
இந்த மாதிரி ஆயிடிச்சே!..
என்னாது!.. தேர்தல் வருதா?..
இது புதுமையான கூட்டணி..ங்கோ!..
அப்பளக் குழவியால் அடி கொடுப்போர் சங்கம்..
தேர்தல் முடியற வரைக்கும்
வெளியே வரக்கூடாது... 
ஏங்க!.. வாக்குச் சாவடி எந்தப் பக்கமுங்கோ?.. 
இவ்வளவு தானா..
இன்னும் இருக்கா?..
அடுத்த வாரம் பார்க்கலாம்.. குருவே..
படங்கள் FB ல் கிடைத்தவை...

எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
என்றென்றும் அழகு..

வாழ்க நலம் 
ஃஃஃ 

25 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    பல்வேறு கவலைகளுக்கு நடுவில் ரசித்துச் சிரிக்க வைக்கும் பதிவு. நிறைய படங்கள் பார்த்ததில்லை. எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. தேர்தல் வருதா படம் சிரிக்க வைத்தது. எலிகளுக்கு பால் கொடுக்கும் பூனையா? நம்ப முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      நம்பமுடியவில்லை தான்..
      மிகவும் ஆச்சர்யம்...

      நீக்கு
  3. அப்பளக்குழவியால் அடிகொடுப்போர் சங்கம் படம் மிக அழகு. அந்தச் சாலை அழகு. மரங்களும், தூரத்தே தெரியும் சிறு பாதையும் ஒருவகை அழகு என்றால் வரிசையில் செல்லும் இதுகளை என்னென்று சொல்ல!! ஹை.......யோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      அங்கேயும் அழகிகளின் ராஜ்ஜியம் தான் போலிருக்கிறது..

      அணி சேவல் அடக்க ஒடுக்கமாக பின்னால் செல்கின்றதே....

      நீக்கு
  4. "இவ்வளவுதானா? இன்னும் இருக்கா"

    சரியான முத்தாய்ப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அனைத்தும் ரசனையான படங்கள் சிரித்து, சிந்திக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான அரசியல். அருமையான கூட்டணி.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாம் அழகு.
    அழகோ அழகு! எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  8. அழகான சேகரிப்பு படங்களில் தங்களின் கருத்துகள் குறும்பு

    பதிலளிநீக்கு
  9. துரை அண்ணா படங்கள் எல்லாம் செம அழகு!! தேர்தல் வருதா படம் பார்த்து சிரிச்சுட்டேன்....கூடவே நம்ம பூஸாரின் நினைவும் அவங்களுக்கு அரசியல் செய்திகளே தெரியாதுனு அவங்க செக் அவங்களை கலாய்ச்சுட்டே இருப்பாங்களா அதனால...ஹா ஹா

    அது போல அந்தக் கூட்டணியும் சிரிச்சுட்டேன் செம...அதுக்கான உங்க கேப்ஷன் ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே!! // ஹா ஹாஅ ஹா ஹா...குரு பூசாரா?!! பூஸாருக்கு குரு நம்மவர் ஆச்சே!!! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே குரு மேலதான் உக்காந்துருக்காரு...பூசாரை ஃபாலோ செஞ்சு இப்ப ஜெர்ரிக்கும் குரு நம்மவர் ஆயிட்டார் போல..ஹா ஹா இது எனக்கு வேறு எதையோ நினைவு படுத்துதே ஹா ஹா டாம் அண்ட் ஜெர்ரி!! (நம்ம ஏஞ்சல் அண்ட் பூஸார் அதிரா)

      கீதா

      நீக்கு
    2. எல்லாருக்கும் அவர் தானே குரு...

      நீக்கு
  11. துரை அண்ணா உங்க முதல் வரிகளுக்கு..

    இப்ப இம்ரான் பேசியிருப்பது வலம் வருது..

    இதில் நிறைய கேள்விகள் இருக்கிறது...இப்படியான பேச்சை அவர் அன்றே செய்திருக்கலாம்...எப்போது புல்வாமா தாக்குதல் நடந்ததோ வெளியாகியதோ அப்போதே.

    அவர் அன்றெ இதைச் செய்திருந்தால் அதாவது இதில் பாகிஸ்தான் அரசிற்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது தீவிரவாதம் ஸோ நாங்கள் எங்கள் நாட்டில் அதைக் களைய முயற்சிக்கிறோம் என்று சொல்லி பேசியிருக்கலாம்.

    இரண்டாவது இந்தியா குண்டு போட்டது பாகிஸ்தான் நாட்டில் உள்ளே மக்கள் மீதல்ல. தீவிரவாதிகளின் இடத்தில்தான். எனவே இது தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் இந்தியா செய்ததே அல்லாமல் பாகிஸ்தான் மீதல்ல என்ற புரிதல் வேண்டும். அதை எப்படி ஒழிப்பது என்றுதான் இரு நாடுகளும் பேச வேண்டுமே அல்லாமல் அவர் பேசியது ஏதோ பாகிஸ்தான் மீது குண்டு போட்டுவிட்டது போல்....போர் அடிப்படையில் பேசியிருப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது.

    தீவிரவாதிகள் அழித்திருப்பது நம் இராணுவ வீரர்களை....அதனால்தான் இந்தியா அங்கு மக்கள் வாழும் ஊருக்குள் சென்று அவர்கள் இராணுவத்தின் மீதோ குண்டு போடவில்லை....தீவிரவாதிகளின் கூடாரத்தின் மீதுதான். இது போர் அல்ல..தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்லாமல் நாட்டின் மீதான போர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் அனாவசியமான போர் உயிரிழப்பு இருக்காது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ இந்த பரபரப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்திப்போம்....

      கீதா

      நீக்கு
    2. எல்லையில் சூழ்ந்திருக்கும் எல்லாப் பிரச்னைகளும் தீர்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..