நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 23, 2019

தைப்பூச தரிசனம் 3

தைப்பூசத் திருநாளில்
தமிழகத்தின் ஆலயங்கள் பலவற்றிலும் நிகழ்ந்த
கோலாகலத் திருக்காட்சிகள் இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...

படங்களை வழங்கிய
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு மனமார்ந்த நன்றி...

தைப்பூசத் திருநாள் கோலாகலம்

ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில்
தருமபுரி







வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..
-: பழம் பாடல் :- 

ஸ்ரீ சிங்காரவேலன் - சிக்கல்..
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி - சுவாமிமலை..
அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.. 
-: திருமுருகாற்றுப்படை :- 

திருப்பரங்குன்றம்..
தைப் பூசத் திருத்தேர்
பழனியம்பதி..
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - தஞ்சை பெரியகோயில்.. 
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
,ஆறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்..
-: கந்த புராணம் :-

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. குட்மார்னிங். தைப்பூச தரிசனங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. திருமுருகாற்றுப்படை வரிகளைப் படிக்கும்போதே கே வீரமணியின் குரல் மனதில் ராகத்துடன் ஒலிப்பது ஒரு மனவிந்தை! அதே போல கந்தபுராண வரிகளை மனம் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ராகத்துடன் படித்தது!

    பதிலளிநீக்கு
  3. தைபூச தரிசனம் அருமையாக செய்து விட்டேன், அழகான படங்கள்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தைப்பூச படங்கள் நன்றாக இருக்கு.

    சிக்கல் சிங்காரவேலர், சுவாமிமலை முருகன் தரிசனம் நினைவுக்கு வந்தது. தஞ்சை பெருவுடையார் கோவிலில் சுப்பிரமணியர் ஆலயத்துக்குச் செல்லவில்லை

    போட்டிருக்கும் பாடல்கள் நினைவலைகளை மீட்டியது.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய தரிசனம் கண்டேன் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. நல்ல தரிசனம்.. முதல் நான்கு படங்கள் மிக அழகு ..

    பதிலளிநீக்கு
  7. படங்களும் அழகு. நாங்கள் தரிசனமும் பெற்றோம். தஞ்சை பெரிய கோயில் /பெருவுடையார் கோயில் முருகன் அழகான அலங்காரம் என்றால் முதல் நான்கு ரொம்பவே அழகு.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. தஞ்சைப்பெருவுடையார் கோயில் சுப்பிரமணியரை இன்றே தரிசனம் செய்தேன். மற்றப்படங்களும் அழகு! அருமை.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..