நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 17, 2016

மார்கழிப் பூக்கள் 02

தமிழமுதம்

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.. (0020)
* * * 

ஔவையார் அருளிய
மூதுரை

நெல்லுக்கு இறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமாம் மழை..
* * *
அருளமு
அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 02




வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
***


ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 02


அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!..
* * *


சிவ தரிசனம்
பஞ்ச சபைகள்

இரண்டாவது திருச்சபை

ரத்ன சபை 
திருஆலங்காடு


இறைவன் - ரத்ன சபாபதி
அம்பிகை - வண்டார்குழலி
தீர்த்தம் - முக்தி தீர்த்தம்
தல விருட்சம் - பலா

கூடினார் உமைதனோடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர்போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனைமேயார்
ஆடினார் காளிகாண ஆலங்காட்டு அடிகளாரே!.. (4/68)
- திருநாவுக்கரசர் - 

ஐயனும் அம்பிகையும்
காரைக்காலம்மையாரின் பொருட்டு
ஆனந்தத் திருநடனம் நிகழ்த்திய திருத்தலம்...

காரைக்காலம்மையார் முக்தியடைந்த திருத்தலம்..

பாடிப் பரவியோர் 
காரைக்காலம்மையார்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
* * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 
* * *

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே..
வாச மலரெல்லாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே..
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே..
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
* * *

- தேவி தரிசனம் -

திருஆலங்காடு
ஸ்ரீ காளிகாம்பிகை 


மனிதரும் தேவரும் மாயமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (004) 
- அபிராமி பட்டர் -  
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

6 கருத்துகள்:

  1. பாடல்களைக் கண்டேன். மனநிறைவு அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் காலைப்பொழுதில்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ஊர் ஜலஹள்ளி ஐயப்பன் கோவிலில் பத்து நாட்களுக்கான விழாத்துவக்கம் நேற்று இருந்தது

    பதிலளிநீக்கு
  4. பாடல்களும் படங்களும் பகிர்வும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..