விடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருந்தது....
உங்களிடம் சில வார்த்தைகள்.. தொடர் பதிவு.. நாமும் போடவேண்டும்!..
எதையாவது தோண்டுவோம்... என்று கணினியைக் குடைந்த வேளையில்
கேலக்ஸி கிணுகிணுத்தது..
யார்... இந்த வேளையில்!?...
தொலைபேசியை உற்று நோக்கினால் - தூக்கி வாரிப் போட்டது..
இங்கே எப்போது வந்தார்?.. ஜொல்லவில்லையே!... - வியப்பு மேலிட்டது..
மப்ரூக்!..மப்ரூக்!.. எப்போ வந்தீங்க குவைத்துக்கு?..
கொஞ்சநேரத்துக்கு முன்னால தான் வந்தேன்...
உங்களப் பார்க்கணும்.. எப்படி வர்றது உங்க எடத்துக்கு!..
சரி.. இப்போ எங்கேயிருக்கீங்க!..
ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில!..
சரி.. அங்கேயே ஒரு டாக்ஸி பிடிங்க.. பாஹேல் பீச் ரோட்ல.. மூனாவது குறுக்கு!..
இதோ வந்துடறேன்!..
சற்றைக்கெல்லாம் சிவப்பு நிற மாருதி சுசுகி அருகில் வந்து நிற்க -
அதனுள்ளிருந்து இறங்கினார் -
புன்னகை வேந்தர் கில்லர் ஜி!..
அன்புடன் கட்டியணைத்து வரவேற்றபோது கண்கள் கலங்கி நின்றன..
எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...
வாங்க.. வாங்க...ஜி!.. நல்லாயிருக்கீங்களா?..
இது உங்க கார் ஆச்சே!.. இதிலேயா குவைத்துக்கு வந்தீங்க!..
ஆமாம்..ஜி!.. நீங்க எப்படியிருக்கீங்க?..
நல்லாருக்கேன் ஜி!... ஆனா -
குவைத்துக்கு இதுல... எப்படி!?... எனக்கு ஒன்னுமே புரியலையே!...
ஜி... நேத்து காலையில தேவகோட்டை ரஸ்தாவில நின்னுகிட்டு அடுத்த பதிவுல யார மடக்கலாம்..ன்னு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப
ஒருத்தர் வந்து சீக்கிரமா குவைத்துக்குப் போகணும்...ன்னார்..
நமக்குத் தான் - முடியாது.. - ன்னு சொல்லி பழக்கமில்லையே..
தேடி வந்த பார்ட்டிய ஒரே அமுக்கா அமுக்கி
குவைத்...ல கொண்டாந்து உட்டுட்டு உங்களுக்கு போன் போட்டேன்...
மனம் விட்டு சிரித்தார்...
ஆகா!.. வாங்க உள்ளே போய் பேசுவோம்...
அறைக்குள் நுழைந்ததும் -
ஜீ!.. நல்ல கதகதப்பா வெந்நீர் இருக்கு..
குளு..குளு..ன்னு ஒரு குளியலைப் போடுங்க..
இட்லி, தேங்காய் சட்னி, கேழ்வரகு புட்டு இருக்கு..
வயிறாரச் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்குங்க...
வழிப் பயண அலுப்பு தீர்ந்திருக்கும்..
மதியத்துக்கு வெஜிடபுள் புலாவ்.. தஞ்சாவூர் தாளிச்சா,
கோபி மக்கான், ஈத்தம் பழ டோலி, தயிர் பச்சடி,
கீரை வடை, காசி அல்வா, இஞ்சி டீ.. வேறென்ன வேணும்!..
இதுவே அதிகம்!..வயிறு கொள்ளாது!.. - சிரித்தார் கில்லர் ஜி....
சாயங்காலம் நாம போகப் போற இடம் ஹோட்டல் மிய்ய்...யாவ்!..
அங்கே River Thames Cuisine ... ல சூப்பர் டின்னர்.. ஓக்கே..வா!...
ஏ.. யப்பா.. ஓக்கே!..ஓக்கே!..
மதிய உணவு எல்லாம் நல்லபடியாக ஆயிற்று!..
மேல் தளத்தின் பின் கதவைத் திறந்து கொண்டு பால்கனிக்கு வந்தோம்..
வெளி நடையில் சிலுசிலு.. என்று குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது...
ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்ததும் கில்லர் ஜி அன்புடன் கேட்டார்..
சொல்லுங்கள் ஜி.. குவைத் வாழ்க்கை எப்படிப் போகுது!..
குவைத் ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...
நம்ம வாழ்க்கை ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...
நல்லது சொல்றதுக்கோ செய்றதுக்கோ இது காலமில்லை!....
ஆனாலும், வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலை...
ஆமா.. கேக்கணும் ..ன்னு நினைச்சேன்..ஜி!..
நீங்க ஏன் இன்னும் தொடர் பதிவுல ஒன்னும் போடலை..
வாழ்க்கையே ஒரு தொடர் பதிவு தானே ஜி!...
ஓகோ!.. - சிரித்தார் தேவகோட்டையார்...
எங்க அப்பாவைப் பார்த்து நான்.. என்னைப் பார்த்து என் பையன்..
இனி என்னோட பேரன்!.. நிச்சயம் எதிர்பார்க்கிற மாதிரி தான்...
விதை ஒன்னு போட சுரை ஒன்னு முளைக்காது....ன்னு சொல்வாங்க....
மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்ன என்று மரம் வளர்ந்து காட்டாதோ!..
- இது கவியரசர் கண்ணதாசன் அவர்களோட வரிகள்...
மண்ணுக்கும் பெண்ணுக்குமாக அற்புதமான வரிகள்!..
ஓடிக் கலக்க வேண்டியது உயிரணுக்களா!.. இல்லை!....
நன்னம்பிக்கை நல்லொழுக்கம்.. இதெல்லாம் தான்!..
இப்படியெல்லாம் இருந்தாத்தான் விளையும் பயிர் முளையிலே தெரியும்!..
தாயைத் தண்ணித் துறையில் பார்த்தால்
பெண்ணை வீட்டில் பார்க்கணுமா!.. - ன்னு சொல்றது வழக்கம்!...
இதுல எல்லாம் எத்தனை அர்த்தங்கள் இருக்கு!...
ஆனா - இன்னைக்கு பொண்ணுங்களே தண்ணியும் கையுமா இருக்குதுங்க!..
ஆமாம் ஜி.. அன்னைக்கு சின்னச் சின்ன வார்த்தைகள்..ல
பெரிய பெரிய தத்துவங்களைச் சொல்லிட்டுப் போனாங்க..
எதுக்கு?.. வருங்கால சந்ததி நல்லா இருக்கணும்..ங்கறதுக்காக!..
ஆனா.. இன்னைக்கு நிலமை அப்படியே மாறிப் போச்சே!..
உண்மைதான் ஜி.. பார்த்துத் திருந்தணும்!..
இல்லேன்னா பட்டுத் திருந்தணும்!..
இன்னைக்கு ஏதாவது அந்த மாதிரி இருக்கா...
அப்பனுக்கும் மகனுக்கும் ஆகலை.. மாமியார் மருமகளுக்குப் பிடிக்கலை...
கூட்டுக் குடும்பம் ராசியில்லை.. எல்லாத்தையும் போட்டு உடைச்சாச்சு...
அப்போ எல்லாம்.. யாரோட கண்காணிப்பிலயாவது நாம இருப்போம்...
பக்கத்து ஊரு கீத்துக் கொட்டகையில சினிமா பார்க்கப் போனாலும்
அங்கே ரெண்டு ஆளு - டே.. தம்பி!.. நீ.. துரையண்ணன் மகன் தானேடா.. - ந்னு
நிப்பாங்க... நம்மால ஒரு எல்லையத் தாண்ட முடியாது..
அந்தப் பொண்ணும் இந்தப் பையனும் நேருக்கு நேராப் பார்த்துக்கிட்டா
உச்சந்தலையில சுர்ர்ர்ர்.... ன்னு இருக்கும்.. அதே சமயம் -
தோலை உரிச்சுடுவாங்களோ..ன்னு அடிவயிறும் பிச்சுக்கிட்டு அடிக்கும்!..
ஏன்னா.. மூத்த புள்ளையா பொறந்ததுங்களுக்குன்னு
தனிப்பட்ட பொறுப்பு இயற்கையாகவே வந்துருக்கும்...
எத்தனையோ அண்ணனுங்க விறகுக் கடையிலயும்
மளிகைக் கடையிலயும் மாடா ஒழைச்சு ஓடாத் தேஞ்சு
வாழ்க்கையைத் தொலைச்சிருக்கானுங்க...
எத்ததனையோ அக்காளுங்க தையல் மிஷினோட மிஷினா -
உழைச்சி உருக்குலைஞ்சி உயிர விட்டுருக்காளுங்க...
இன்னைக்கு அப்படி யாரையாவது காட்ட முடியுமா?...
இப்போ பக்கத்து வீட்டுக்காரன் கூட யாரு..ன்னு தெரியலை...
ஏன்டி.. என்னை உனக்குப் புடிக்கல்லே....ன்னு கேட்டு
பொண்ணுங்க மேல ஆசிட் அடிக்கிறான்...
வன்புணர்வு பண்ணதும் இல்லாம
கருவாசல்..ல கைய விட்டுக் குடைஞ்சி
இரும்புக் கம்பியால சிதைக்கிறான்...
அவனுக்கு என்ன கிடைக்குது..
கடுந்தண்டனையா?.. இல்லையே!.
ஆடு, மாடு, கைச் செலவுக்குப் பணம்!..
அப்புறம் எப்படி.. அவனுங்க திருந்துவானுங்க?...
ஆறு வயசுக் குழந்தையக் கெடுத்து தீய வெச்சிக் கொளுத்துறான்..
ஜாமீன்..ல வர்றான்.. பெத்தவ தலைய ரெண்டாப் பொளக்குறான்..
கோர்ட்டு சொல்லுது.. புள்ளைங்களுக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சின்னா
பெத்தவங்க அவங்களோட கல்யாண விஷயத்துல தலையிடக் கூடாது...ன்னு...
அவங்களா வந்து சோறு ஊட்டி விட்டாங்க?..
அவங்களா வந்து மூக்கு தொடச்சு விட்டாங்க?...
அவங்களா வந்து மூத்திரம் கழுவி விட்டாங்க?...
நல்லொழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்காட்டாலும் பரவாயில்லை..
இருக்கிறதக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிற மாதிரியே எல்லாம் செய்றாங்க!..
ஒழுங்கா படிக்கலே..ன்னா கண்ணு ரெண்டையும் உட்டுட்டு
ஒடம்புத் தோலை உரிச்சுடுங்க!..
அந்தக் காலத்தில இந்த கோரிக்கை ரொம்பவே பிரசித்தம்...
வாத்தியார் இந்தப் பயலைப் போட்டு சாத்துற சாத்து... ல
அந்தப் பயலுக்கு ஒன்னுக்கு வந்திடும்!..
பள்ளிக்கூடந் தான் பண்பாட்டுச் சின்னமா இருந்தது..
இன்னைக்கு பசங்க பள்ளிக்கூடத்துக்கு பட்டாக் கத்தியோட வர்றான்னுங்க!.. அதை வீடியோ எடுத்து நெட்டு..ல வேற போடுறானுங்க!..
இதுல அறிவுரை ஒன்னுதான் இவனுங்களுக்குக் கேடு..
அவனவன் கர்மத்தை அவனவன் அனுபவிச்சுத் தொலைக்கட்டும்!..
ரொம்பவும் பொங்கிட்டீங்களே..ஜீ!.. - தேவகோட்டையார் ஆதங்கப்பட்டார்..
எங்க சித்தப்பா என்ன செய்வார்...ன்னா சாலையில கிடக்கிற வாழப் பழத் தோலை எடுத்துட்டு வந்து மூனாவது வீட்டுல நிக்கிற ஆட்டுக் குட்டிக்குக் கொடுப்பார்..
அந்த ஆட்டுக் காரனுக்கும் சந்தோஷம்.. நமக்கு செலவு மிச்சம்..ன்னு..
ஒருநாள் இந்த ஆடு வயிறு வீங்கி செத்துப் போச்சு..
அடடே!..
ஆட்டுக்காரன் பஞ்சாயத்துக்குப் போய்ட்டான்.. இந்த ஆளுதான் எதையோ கொடுத்து ஆட்டைக் கொன்னுட்டான்... னு..
அடப்பாவமே...
அப்புறம் ஆட்டை அறுத்துப் பார்த்தால் - வெல்ல மண்டி சாக்கு, பனை ஓலை எல்லாம் வயித்துக்குள்ள இருக்கு... அந்த ஆடு மேய்ச்சல்...ல அதையெல்லாம் பொறுக்கித் தின்னுருக்கு!...
அதுக்கப்புறம் உங்க சித்தப்பா திருந்திட்டாரா?..
அதுதான் இல்லை.. நாம தப்பு செய்யாத வரைக்கும் தெய்வம் நம்ம கூட தான் இருக்கும்.. அப்படி..ன்னு சொல்லிட்டு அதே மாதிரி செஞ்சுக்கிட்டு தான் இருந்தார்... அவரால சுபாவத்தை மாத்திக்க முடியலை...
இந்த சித்தப்பா சொன்னது தான் ஒரு வார்த்தை..
டேய்.. அண்ணன் நெஞ்சு வலிக்காரன்..டா..
அண்ணன் மனசு நோகாம நடந்துக்க!...
என் தந்தைக்கு மனக் கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்!..
இது தான் பதின்ம வயதில் எனக்கு அறிவுரை..
இன்றைக்கு ஆச்சு வயசு அறுபதுக்கு மேலே..
என் தந்தையும் இல்லை.. அன்பு சித்தப்பாவும் இல்லை...
ஆனால் சொன்ன வார்த்தை காதுக்கு அருகிலேயே இருக்கிறது..
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் ஜி!..
இருந்தாலும் அந்தக் காலத்திலேயே தறுதலைகளும் இருந்தாங்க..
இந்தக் காலத்திலயும் நல்லவங்க இருக்கிறாங்க!..
தவமும் தவமுடையார்க்கே ஆகும்...ன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி
நல்லவனா வாழ்றதுக்கும் நல்லது செஞ்சிருக்கணும்!...
அறிவுரையைக் கேட்டுக்கிறதுக்கும் கொடுத்து வெச்சிருக்கணும்..
எவ்வளவோ பெரிய மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த நாடு இது..
அவங்க சொன்னதை எல்லாம் ஒழுங்கா கேட்டிருந்தா
நாம இப்படி தொடர் பதிவு போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..
நல்லா சொன்னீங்க!..
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி இருக்கு..
நூல் மாதிரி தான் அந்த வேலி... அறுத்துக்கிட்டு அந்தப் பக்கம் போயிடலாம்..
ஆனா- திரும்பி உள்ள வர்றது தான் கஷ்டம்.. அபிமன்யு சக்ர வியூகத்தை உடைச்சிக்கிட்டு துரியோதனன் கிட்ட போன மாதிரி தான்..
ஆனாலும் நல்லது எது.. கெட்டது எது.. எதுவும் தெரியலே..
எல்லாமே மாறிப் போச்சு..
ஒரு காலத்து...ல குடிகாரப் பயலுங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க...
இன்னைக்கு கல்யாண வீட்டுல..யே சாராய விருந்து நடக்குது.. மாப்பிள்ளையே போதையில வர்றான் மணவறைக்கு..
இன்னும் எவ்வளவோ இருக்கு காலக் கொடுமை எல்லாம்...
ஏன் அதைய எல்லாம் பேசி நல்ல பொழுதைக் கெடுப்பானேன்!...
எப்படியோ ஓட்டைச் சட்டியிலயும் கொழுக்கட்டை வெந்துகிட்டு இருக்கு!...
ஆகட்டும் ஜி.. நான் புறப்படுகின்றேன்... - கில்லர் ஜி அவர்கள் புறப்பட முனைந்தார்..
ரெண்டு நாளைக்கு இங்கே இருக்கலாமே...
இல்லே.. இல்லே.. அங்கிட்டு நெறைய சோளி கெடக்கு...
ஆகா.. கேக்க மறந்துட்டேனே... என்னமோ இந்தப் பதிவில சொல்றேன்னு..
அதை.. ஏன் சொல்லிக்கிட்டு..
சொல்லுங்க... வெளியில சொன்னாத்தானே மனசு ஆறும்...
அது ஒன்னும் இல்லை.. ஜனவரி அன்னைக்கு இடப் பக்கம் முழுதும் கையிலயும் கால்..லயும் திடீர்..ன்னு வலி.. இயக்கம் குறைஞ்சு போச்சு..
என்ன ஜீ... இப்படிச் சொல்றீங்க!.. - அதிர்ந்தார் கில்லர் ஜி..
ரெண்டு நாள் ரொம்பவும் கஷ்டம்..
என்ன இது.. இவ்வளவு கவனக் குறைவா இருந்திருக்கீங்களே!..
மார்கழி கடைசி நாள் பதிவில இலை மறைவா இந்த சேதிய சொன்னதும் ஸ்ரீராம், கீதா, துளசிதரன், இளமதி, ஜம்புலிங்கம் ஐயா, தேன்மொழி கிரேஸ் - இவங்களோட நீங்களும் ஆறுதலா எழுதியிருந்தீங்க...
என்னோட பிரச்னைகள் தீரணும்.. ன்னு நீங்கள்..லாம்
வேண்டிக்கிட்டப்போ எனக்கு ஆனந்தக் கண்ணீர் தான் வந்தது..
உங்களிடம் சில வார்த்தைகள்.. தொடர் பதிவு.. நாமும் போடவேண்டும்!..
எதையாவது தோண்டுவோம்... என்று கணினியைக் குடைந்த வேளையில்
கேலக்ஸி கிணுகிணுத்தது..
யார்... இந்த வேளையில்!?...
தொலைபேசியை உற்று நோக்கினால் - தூக்கி வாரிப் போட்டது..
இங்கே எப்போது வந்தார்?.. ஜொல்லவில்லையே!... - வியப்பு மேலிட்டது..
மப்ரூக்!..மப்ரூக்!.. எப்போ வந்தீங்க குவைத்துக்கு?..
கொஞ்சநேரத்துக்கு முன்னால தான் வந்தேன்...
உங்களப் பார்க்கணும்.. எப்படி வர்றது உங்க எடத்துக்கு!..
சரி.. இப்போ எங்கேயிருக்கீங்க!..
ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில!..
சரி.. அங்கேயே ஒரு டாக்ஸி பிடிங்க.. பாஹேல் பீச் ரோட்ல.. மூனாவது குறுக்கு!..
இதோ வந்துடறேன்!..
சற்றைக்கெல்லாம் சிவப்பு நிற மாருதி சுசுகி அருகில் வந்து நிற்க -
அதனுள்ளிருந்து இறங்கினார் -
புன்னகை வேந்தர் கில்லர் ஜி!..
அன்புடன் கட்டியணைத்து வரவேற்றபோது கண்கள் கலங்கி நின்றன..
எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...
வாங்க.. வாங்க...ஜி!.. நல்லாயிருக்கீங்களா?..
இது உங்க கார் ஆச்சே!.. இதிலேயா குவைத்துக்கு வந்தீங்க!..
ஆமாம்..ஜி!.. நீங்க எப்படியிருக்கீங்க?..
நல்லாருக்கேன் ஜி!... ஆனா -
குவைத்துக்கு இதுல... எப்படி!?... எனக்கு ஒன்னுமே புரியலையே!...
ஜி... நேத்து காலையில தேவகோட்டை ரஸ்தாவில நின்னுகிட்டு அடுத்த பதிவுல யார மடக்கலாம்..ன்னு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப
ஒருத்தர் வந்து சீக்கிரமா குவைத்துக்குப் போகணும்...ன்னார்..
நமக்குத் தான் - முடியாது.. - ன்னு சொல்லி பழக்கமில்லையே..
தேடி வந்த பார்ட்டிய ஒரே அமுக்கா அமுக்கி
குவைத்...ல கொண்டாந்து உட்டுட்டு உங்களுக்கு போன் போட்டேன்...
மனம் விட்டு சிரித்தார்...
ஆகா!.. வாங்க உள்ளே போய் பேசுவோம்...
அறைக்குள் நுழைந்ததும் -
ஜீ!.. நல்ல கதகதப்பா வெந்நீர் இருக்கு..
குளு..குளு..ன்னு ஒரு குளியலைப் போடுங்க..
இட்லி, தேங்காய் சட்னி, கேழ்வரகு புட்டு இருக்கு..
வயிறாரச் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்குங்க...
வழிப் பயண அலுப்பு தீர்ந்திருக்கும்..
மதியத்துக்கு வெஜிடபுள் புலாவ்.. தஞ்சாவூர் தாளிச்சா,
கோபி மக்கான், ஈத்தம் பழ டோலி, தயிர் பச்சடி,
கீரை வடை, காசி அல்வா, இஞ்சி டீ.. வேறென்ன வேணும்!..
இதுவே அதிகம்!..வயிறு கொள்ளாது!.. - சிரித்தார் கில்லர் ஜி....
சாயங்காலம் நாம போகப் போற இடம் ஹோட்டல் மிய்ய்...யாவ்!..
அங்கே River Thames Cuisine ... ல சூப்பர் டின்னர்.. ஓக்கே..வா!...
ஏ.. யப்பா.. ஓக்கே!..ஓக்கே!..
மதிய உணவு எல்லாம் நல்லபடியாக ஆயிற்று!..
மேல் தளத்தின் பின் கதவைத் திறந்து கொண்டு பால்கனிக்கு வந்தோம்..
வெளி நடையில் சிலுசிலு.. என்று குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது...
ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்ததும் கில்லர் ஜி அன்புடன் கேட்டார்..
சொல்லுங்கள் ஜி.. குவைத் வாழ்க்கை எப்படிப் போகுது!..
குவைத் ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...
நம்ம வாழ்க்கை ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...
நல்லது சொல்றதுக்கோ செய்றதுக்கோ இது காலமில்லை!....
ஆனாலும், வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலை...
ஆமா.. கேக்கணும் ..ன்னு நினைச்சேன்..ஜி!..
நீங்க ஏன் இன்னும் தொடர் பதிவுல ஒன்னும் போடலை..
வாழ்க்கையே ஒரு தொடர் பதிவு தானே ஜி!...
ஓகோ!.. - சிரித்தார் தேவகோட்டையார்...
எங்க அப்பாவைப் பார்த்து நான்.. என்னைப் பார்த்து என் பையன்..
இனி என்னோட பேரன்!.. நிச்சயம் எதிர்பார்க்கிற மாதிரி தான்...
விதை ஒன்னு போட சுரை ஒன்னு முளைக்காது....ன்னு சொல்வாங்க....
மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்ன என்று மரம் வளர்ந்து காட்டாதோ!..
- இது கவியரசர் கண்ணதாசன் அவர்களோட வரிகள்...
மண்ணுக்கும் பெண்ணுக்குமாக அற்புதமான வரிகள்!..
ஓடிக் கலக்க வேண்டியது உயிரணுக்களா!.. இல்லை!....
நன்னம்பிக்கை நல்லொழுக்கம்.. இதெல்லாம் தான்!..
இப்படியெல்லாம் இருந்தாத்தான் விளையும் பயிர் முளையிலே தெரியும்!..
தாயைத் தண்ணித் துறையில் பார்த்தால்
பெண்ணை வீட்டில் பார்க்கணுமா!.. - ன்னு சொல்றது வழக்கம்!...
இதுல எல்லாம் எத்தனை அர்த்தங்கள் இருக்கு!...
ஆனா - இன்னைக்கு பொண்ணுங்களே தண்ணியும் கையுமா இருக்குதுங்க!..
ஆமாம் ஜி.. அன்னைக்கு சின்னச் சின்ன வார்த்தைகள்..ல
பெரிய பெரிய தத்துவங்களைச் சொல்லிட்டுப் போனாங்க..
எதுக்கு?.. வருங்கால சந்ததி நல்லா இருக்கணும்..ங்கறதுக்காக!..
ஆனா.. இன்னைக்கு நிலமை அப்படியே மாறிப் போச்சே!..
உண்மைதான் ஜி.. பார்த்துத் திருந்தணும்!..
இல்லேன்னா பட்டுத் திருந்தணும்!..
இன்னைக்கு ஏதாவது அந்த மாதிரி இருக்கா...
அப்பனுக்கும் மகனுக்கும் ஆகலை.. மாமியார் மருமகளுக்குப் பிடிக்கலை...
கூட்டுக் குடும்பம் ராசியில்லை.. எல்லாத்தையும் போட்டு உடைச்சாச்சு...
அப்போ எல்லாம்.. யாரோட கண்காணிப்பிலயாவது நாம இருப்போம்...
பக்கத்து ஊரு கீத்துக் கொட்டகையில சினிமா பார்க்கப் போனாலும்
அங்கே ரெண்டு ஆளு - டே.. தம்பி!.. நீ.. துரையண்ணன் மகன் தானேடா.. - ந்னு
நிப்பாங்க... நம்மால ஒரு எல்லையத் தாண்ட முடியாது..
அந்தப் பொண்ணும் இந்தப் பையனும் நேருக்கு நேராப் பார்த்துக்கிட்டா
உச்சந்தலையில சுர்ர்ர்ர்.... ன்னு இருக்கும்.. அதே சமயம் -
தோலை உரிச்சுடுவாங்களோ..ன்னு அடிவயிறும் பிச்சுக்கிட்டு அடிக்கும்!..
ஏன்னா.. மூத்த புள்ளையா பொறந்ததுங்களுக்குன்னு
தனிப்பட்ட பொறுப்பு இயற்கையாகவே வந்துருக்கும்...
எத்தனையோ அண்ணனுங்க விறகுக் கடையிலயும்
மளிகைக் கடையிலயும் மாடா ஒழைச்சு ஓடாத் தேஞ்சு
வாழ்க்கையைத் தொலைச்சிருக்கானுங்க...
எத்ததனையோ அக்காளுங்க தையல் மிஷினோட மிஷினா -
உழைச்சி உருக்குலைஞ்சி உயிர விட்டுருக்காளுங்க...
இன்னைக்கு அப்படி யாரையாவது காட்ட முடியுமா?...
இப்போ பக்கத்து வீட்டுக்காரன் கூட யாரு..ன்னு தெரியலை...
வீட்டு..ல புத்தி சொன்னாலும் புடிக்கலை...
பள்ளிக் கூடத்து..ல நல்லது சொன்னாலும் புடிக்கலை...
என்னதான் செய்ய முடியும்... ஜி?..
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. ந்னு பெத்துக்கிட்டு
அத நல்லபடியா வளர்க்கத் தெரியாம தடுமாறுறாங்க...
புள்ளைங்களும் நல்லபடியா வளரத் தெரியாம தடம் மாறுறாங்க!..
பொண்ணுங்க மேல ஆசிட் அடிக்கிறான்...
வன்புணர்வு பண்ணதும் இல்லாம
கருவாசல்..ல கைய விட்டுக் குடைஞ்சி
இரும்புக் கம்பியால சிதைக்கிறான்...
அவனுக்கு என்ன கிடைக்குது..
கடுந்தண்டனையா?.. இல்லையே!.
ஆடு, மாடு, கைச் செலவுக்குப் பணம்!..
அப்புறம் எப்படி.. அவனுங்க திருந்துவானுங்க?...
ஆறு வயசுக் குழந்தையக் கெடுத்து தீய வெச்சிக் கொளுத்துறான்..
ஜாமீன்..ல வர்றான்.. பெத்தவ தலைய ரெண்டாப் பொளக்குறான்..
கோர்ட்டு சொல்லுது.. புள்ளைங்களுக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சின்னா
பெத்தவங்க அவங்களோட கல்யாண விஷயத்துல தலையிடக் கூடாது...ன்னு...
அவங்களா வந்து சோறு ஊட்டி விட்டாங்க?..
அவங்களா வந்து மூக்கு தொடச்சு விட்டாங்க?...
அவங்களா வந்து மூத்திரம் கழுவி விட்டாங்க?...
நல்லொழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்காட்டாலும் பரவாயில்லை..
இருக்கிறதக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிற மாதிரியே எல்லாம் செய்றாங்க!..
ஒழுங்கா படிக்கலே..ன்னா கண்ணு ரெண்டையும் உட்டுட்டு
ஒடம்புத் தோலை உரிச்சுடுங்க!..
அந்தக் காலத்தில இந்த கோரிக்கை ரொம்பவே பிரசித்தம்...
வாத்தியார் இந்தப் பயலைப் போட்டு சாத்துற சாத்து... ல
அந்தப் பயலுக்கு ஒன்னுக்கு வந்திடும்!..
பள்ளிக்கூடந் தான் பண்பாட்டுச் சின்னமா இருந்தது..
இன்னைக்கு பசங்க பள்ளிக்கூடத்துக்கு பட்டாக் கத்தியோட வர்றான்னுங்க!.. அதை வீடியோ எடுத்து நெட்டு..ல வேற போடுறானுங்க!..
இதுல அறிவுரை ஒன்னுதான் இவனுங்களுக்குக் கேடு..
அவனவன் கர்மத்தை அவனவன் அனுபவிச்சுத் தொலைக்கட்டும்!..
ரொம்பவும் பொங்கிட்டீங்களே..ஜீ!.. - தேவகோட்டையார் ஆதங்கப்பட்டார்..
எங்க சித்தப்பா என்ன செய்வார்...ன்னா சாலையில கிடக்கிற வாழப் பழத் தோலை எடுத்துட்டு வந்து மூனாவது வீட்டுல நிக்கிற ஆட்டுக் குட்டிக்குக் கொடுப்பார்..
அந்த ஆட்டுக் காரனுக்கும் சந்தோஷம்.. நமக்கு செலவு மிச்சம்..ன்னு..
ஒருநாள் இந்த ஆடு வயிறு வீங்கி செத்துப் போச்சு..
அடடே!..
ஆட்டுக்காரன் பஞ்சாயத்துக்குப் போய்ட்டான்.. இந்த ஆளுதான் எதையோ கொடுத்து ஆட்டைக் கொன்னுட்டான்... னு..
அடப்பாவமே...
அப்புறம் ஆட்டை அறுத்துப் பார்த்தால் - வெல்ல மண்டி சாக்கு, பனை ஓலை எல்லாம் வயித்துக்குள்ள இருக்கு... அந்த ஆடு மேய்ச்சல்...ல அதையெல்லாம் பொறுக்கித் தின்னுருக்கு!...
அதுக்கப்புறம் உங்க சித்தப்பா திருந்திட்டாரா?..
அதுதான் இல்லை.. நாம தப்பு செய்யாத வரைக்கும் தெய்வம் நம்ம கூட தான் இருக்கும்.. அப்படி..ன்னு சொல்லிட்டு அதே மாதிரி செஞ்சுக்கிட்டு தான் இருந்தார்... அவரால சுபாவத்தை மாத்திக்க முடியலை...
இந்த சித்தப்பா சொன்னது தான் ஒரு வார்த்தை..
டேய்.. அண்ணன் நெஞ்சு வலிக்காரன்..டா..
அண்ணன் மனசு நோகாம நடந்துக்க!...
என் தந்தைக்கு மனக் கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்!..
இது தான் பதின்ம வயதில் எனக்கு அறிவுரை..
இன்றைக்கு ஆச்சு வயசு அறுபதுக்கு மேலே..
என் தந்தையும் இல்லை.. அன்பு சித்தப்பாவும் இல்லை...
ஆனால் சொன்ன வார்த்தை காதுக்கு அருகிலேயே இருக்கிறது..
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் ஜி!..
இருந்தாலும் அந்தக் காலத்திலேயே தறுதலைகளும் இருந்தாங்க..
இந்தக் காலத்திலயும் நல்லவங்க இருக்கிறாங்க!..
தவமும் தவமுடையார்க்கே ஆகும்...ன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி
நல்லவனா வாழ்றதுக்கும் நல்லது செஞ்சிருக்கணும்!...
அறிவுரையைக் கேட்டுக்கிறதுக்கும் கொடுத்து வெச்சிருக்கணும்..
எவ்வளவோ பெரிய மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த நாடு இது..
அவங்க சொன்னதை எல்லாம் ஒழுங்கா கேட்டிருந்தா
நாம இப்படி தொடர் பதிவு போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..
நல்லா சொன்னீங்க!..
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி இருக்கு..
நூல் மாதிரி தான் அந்த வேலி... அறுத்துக்கிட்டு அந்தப் பக்கம் போயிடலாம்..
ஆனா- திரும்பி உள்ள வர்றது தான் கஷ்டம்.. அபிமன்யு சக்ர வியூகத்தை உடைச்சிக்கிட்டு துரியோதனன் கிட்ட போன மாதிரி தான்..
ஆனாலும் நல்லது எது.. கெட்டது எது.. எதுவும் தெரியலே..
எல்லாமே மாறிப் போச்சு..
ஒரு காலத்து...ல குடிகாரப் பயலுங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க...
இன்னைக்கு கல்யாண வீட்டுல..யே சாராய விருந்து நடக்குது.. மாப்பிள்ளையே போதையில வர்றான் மணவறைக்கு..
இன்னும் எவ்வளவோ இருக்கு காலக் கொடுமை எல்லாம்...
ஏன் அதைய எல்லாம் பேசி நல்ல பொழுதைக் கெடுப்பானேன்!...
எப்படியோ ஓட்டைச் சட்டியிலயும் கொழுக்கட்டை வெந்துகிட்டு இருக்கு!...
ஆகட்டும் ஜி.. நான் புறப்படுகின்றேன்... - கில்லர் ஜி அவர்கள் புறப்பட முனைந்தார்..
ரெண்டு நாளைக்கு இங்கே இருக்கலாமே...
இல்லே.. இல்லே.. அங்கிட்டு நெறைய சோளி கெடக்கு...
ஆகா.. கேக்க மறந்துட்டேனே... என்னமோ இந்தப் பதிவில சொல்றேன்னு..
அதை.. ஏன் சொல்லிக்கிட்டு..
சொல்லுங்க... வெளியில சொன்னாத்தானே மனசு ஆறும்...
அது ஒன்னும் இல்லை.. ஜனவரி அன்னைக்கு இடப் பக்கம் முழுதும் கையிலயும் கால்..லயும் திடீர்..ன்னு வலி.. இயக்கம் குறைஞ்சு போச்சு..
என்ன ஜீ... இப்படிச் சொல்றீங்க!.. - அதிர்ந்தார் கில்லர் ஜி..
ரெண்டு நாள் ரொம்பவும் கஷ்டம்..
என்ன இது.. இவ்வளவு கவனக் குறைவா இருந்திருக்கீங்களே!..
மார்கழி கடைசி நாள் பதிவில இலை மறைவா இந்த சேதிய சொன்னதும் ஸ்ரீராம், கீதா, துளசிதரன், இளமதி, ஜம்புலிங்கம் ஐயா, தேன்மொழி கிரேஸ் - இவங்களோட நீங்களும் ஆறுதலா எழுதியிருந்தீங்க...
என்னோட பிரச்னைகள் தீரணும்.. ன்னு நீங்கள்..லாம்
வேண்டிக்கிட்டப்போ எனக்கு ஆனந்தக் கண்ணீர் தான் வந்தது..
இப்போ பரவாயில்லை... என்றாலும் இயல்பா தட்டச்சு செய்ய முடியலை.. தோள் வலியோட தான் பதிவுகளையும் கொடுத்துக்கிட்டு இருக்கிறேன்...
சரி.. கிளம்புங்க ஊருக்கு...
லீவு கேட்டிருக்கிறேன்..
அதெல்லாம் சரியாகிடும்.. கவலைய விடுங்க..
நல்ல நேரத்துல இதை பேசியிருக்கக் கூடாது...
சரி.. வாங்க காபி சாப்பிடலாம்!..
ரொம்ப மகிழ்ச்சி.. இருந்தாலும்
உங்க சிரமத்தைப் பார்க்கிறப்போ மனதாரச் சொல்லமுடியலை..
உங்க சிரமத்தைப் பார்க்கிறப்போ மனதாரச் சொல்லமுடியலை..
உடம்பைப் பார்த்துக்குங்க.. அப்போ நான் புறப்படுகிறேன்...
ஆகட்டும் ஜி.. கவனம்!..
சாலையில் விரைந்தோடிய சுசுகி - தொலை தூரத்தில் புள்ளியானது..
***
உங்களிடம் சில வார்த்தைகள்..
இதைப் பற்றி வெளியாகிய தொடர் பதிவுகள் அனைத்துமே
அருமையாக இருந்தன... ஒவ்வொன்றும் சிறப்பு...
அவற்றின் சிறப்பை என்னுடைய பதிவும் எய்துமா!.. தெரியவில்லை..
நட்பு வளையத்தில் அனைவருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால்
இனி யாரை அழைப்பது!...
அனைவருக்கும்
அன்பின் வணக்கமும் நன்றியும்!..
வாழ்க நலம்..
***










