நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 25, 2026

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை


ராமாயணம் காட்டுகின்ற நெறி

காணொளிக்கு நன்றி


வாழ்க நலம்
***

ஞாயிறு, ஜனவரி 29, 2023

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 15
 ஞாயிற்றுக்கிழமை


இன்றொரு காணொளி.
(நன்றி:Fb)


இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப 
நல்ல மனசு வேணுங்க!..

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.. (80)

வாழ்க வையகம்
வாழ்க அன்புடன்..
***

வியாழன், ஜனவரி 19, 2023

அன்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 5
வியாழக்கிழமை


என்னை நம்புங்கள். நீங்கள் அழைக்காமலேயே
உங்கள் இடத்துக்கு நான் வருவேன்!.. 
- என்கின்றார்
ஸ்ரீ சாய்பாபா..


உங்களைச் சுற்றி பரந்து பட்டுள்ள இந்த
உலகத்து உயிர்களிடம் யாரெல்லாம் உண்மையுடனும், அன்புடனும், கனிவுடனும் நடந்து கொள்கிறீர்களோ அவர்களை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 


என்னை நம்புங்கள். என்னை நம்புகிறவர்கள், என்னை அழைக்க வேண்டும் என்று நான் காத்துக்கொண்டிருக்க மாட்டேன். அவர்கள் அழைக்காமலேயே நான் அவர்களிடம் வருவேன்!.. 
ஸ்ரீஸ்ரீ பாபா..


ஓம் 
சாய் ராம்
சாய் ராம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், நவம்பர் 18, 2019

அன்பின் வழியது..

இன்றைய பதிவில் ஒரு காட்சியும் காணொளியும்..

இவை Fb ல் வந்தவையாகும்..


இவற்றைக் காண்பவர் மனம் நிச்சயமாக நெகிழும்...




ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.. (0033)
-: திருக்குறள் :-

வாழ்க நலம் 
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 08, 2017

காக்கையின் பாட்டு

நேற்று வியாழக்கிழமை இரவு வேலை சற்று அதிகம்.. 
காலையில் அறைக்குத் திரும்புவதில் தாமதம்..

இரவு வேலைக்குச் செல்லும்போது இணைய இணைப்பினை எடுத்துச் செல்லாததால் வலையுலகின் நடப்புகள் தெரியவில்லை..

அறைக்குத் திரும்பிய பின்னர் தான் தெரிகிறது - அன்பின் ஸ்ரீராம் அவர்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளியிருப்பது..

நேற்றைய அறிவிப்பின்படி - 
வருகின்ற வியாழன்று காக்கையின் பாடல் வெளியாக இருந்தது..

ஆனால்,
கொடுத்து வைத்த காக்கை!..

இன்று காலையிலேயே எங்கள் Blog ல் கவிதை வெளியாகிவிட்டது..

அதற்குப் பின்னும் தோரணம் கட்டாமல் இருந்தால் எப்படி!?..

இதோ - நமது தளத்திலும்!..

உங்களுடன் உங்கள் காக்கை!..
* * *

காகா.. காகா.. கா..
காகா.. என்றபடி -

நான் வாசற்படியில்
வந்தமர்ந்தேன்..
கண்டங்கருப்பாய்
சஞ்சலம்..
காக்கையைக் கண்டதும்
சங்கடம்..
கண்களில் சகுனம்..
காலையில் சலனம்..



கண்டத்தில் வெள்ளை
மணிக் காக்கை!..
கன்னங் கரேலென்று
கருங் காக்கை?..
இடம் நல்லதா..
வலம் நல்லதா..
மனம் நல்லதென
அறியீரோ!..

மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..

ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..



ஆயினும் என்பணி
மறந்தேனா..
அன்பெனும் வழியைத்
துறந்தேனா?..
கா..கா.. என்றே
கரைந்திருந்தேன்..
கா.. கா.. என்றே
சேர்ந்திருந்தேன்!..

கா.. கா.. என்றேன்..
நோக்கவில்லை..
கரியன் கரைந்ததை
கேட்கவில்லை..
சென்றவர் சேர்ந்தவர்
இது என்றான்..
முன்னோர் மூத்தோர்
வடிவென்றான்..

இல்லை.. இல்லை..
நான்.. என்றேன்..
என் விடை எவரும் 
விரும்பவில்லை...
சிறு புன்னகை கூட
அரும்பவில்லை..
முனைப்பாய் எவரும்
நினைக்கவில்லை..

எனக்கே என்னைப்
பிடிக்கவில்லை..
எனக்கே என்மனம்
பொறுக்கவில்லை...
மானிடர் மடமை
தெளியவில்லை.
மானிடர் மனமும்
புரியவில்லை..



கருவில் சுமந்த 
உன் அன்னை
என்னைப் போன்றே
வந்தாளா?..
தோளில் சுமந்த 
உன் தந்தை
காக்கை என்றே
நின்றாரா?..

கரவாதுண்ணும்
காட்சியன்றோ 
காணச் சொல்லிக்
காட்டிற்று...
கதையாய் கதையாய்
எதை எதையோ
கருதிக் கொள்ள
நான் பழியா!?..

முன்வினை இன்னும்
முடியலையா?..
ஏழ்பிறப்பு என்பதும்
தீரலையா?..
கா.. எனக் கரைந்தும்
புரியலையா!..
கருத்தில் எதுவும்
ஏறலையா?..

கா.. கா.. என்றேன்..
கரவாதிருப்பீர்..
கா.. கா.. என்றேன்..
கலந்தினிதிருப்பீர்!..
கா.. கா.. என்றேன்..
கருணையில் வாழ்க..
கா.. கா.. என்றேன்..
கனிவுடன் வாழ்க!..

கா.. கா.. என்றே
கரைந்ததனால்
கண்டவர் மனதினில்
பதியவில்லை...
காக்கையின் மொழியும்
புரியவில்லை!..
வேறொரு வழியும்
தெரியவில்லை..

ஏழரைச் சனியின்
கொடுமை பெரிது..
தப்பிப் பிழைத்தால்
நாள் இனிது!..
கைப்பிடி சோற்றில்
பழி தொலைந்தால்
காக்கைக்கன்றோ
பழி தொடரும்!?.

உன்நிழல் போல
உன் வினையும்!..
உன்னுடன் தானே
உடன் சேரும்!..
உன்பசி தீர 
நான் தின்றால்
மனிதா உன்பழி
எப்படித் தீரும்?..

காரியின் நல்லருள்
வேண்டும் எனில்
காரியின் கால்களில்
விழவேண்டும்..
காரியின் அடிமை
எனக்கெதற்கு
கையூட்டளித்துக்
களிக்கின்றீர்?..



கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..

காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க காவினை
எனக் கரைந்தேன்....
கருணை இலாமல் 
காடழித்தீர்..
கா.. எனக் கலங்கி
நான் கரைந்தேன்!..

காக்கைகள் கலந்ததை
கணடதுண்டோ?.
கா.. கா.. என்றதும்
அதற்கேயாம்!.
கடுவிழி நாயாய்
அலைபவருக்கு
காக்கை மொழியும்
புரிவதில்லை!..

காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் எனில்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..

இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப் 
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..

என்னே மடமை..
இதுவோ மானிடம்..
மானிடர் மடமை
விலகவில்லை..
காகா.. என்றதும்
தெரியவில்லை..
 கா.. கா.. என்றதும்
புரியவில்லை...

சுற்றம் சூழல்
வாழ்வதற்கே
கா.. கா.. என்று
நான் கரைந்தேன்..
அஃறிணை என்றே
எனைப் பழித்தீர்..
நல்லன மறந்து
தவறிழைத்தீர்..

உன்இனம் இனிதாய்
வாழ்வதற்காய்
என்போல் பறவைக்
குலம் கெடுத்தாய்..  
கூட்டினை அழித்தாய்..
காட்டினை எரித்தாய்..
தீராப் பழியை
நீயே விளைத்தாய்!..



உறவுகள் தொலைத்த
மானிடனே.. உன்
உள்ளம் முழுதும்
பாழிடம்!..
காவினை அழித்த
மானிடமே இனி
வேறெது உனக்கு
வாழ்விடம்?..

காலங்கள் ஆயிரம்
போனாலும்
காக்கையின் குணமோ
கரைய வில்லை..
கற்றவர் மொழியும்
புரியவில்லை
காக்கை மொழியும்
விளங்கவில்லை!..

ஏழைக்கு இரங்குக..
இனிதே நோக்குக.
இருகை அதனால்
இயற்கை போற்றுக..
அன்பை வாங்குக..
மனிதம் தாங்குக..
பண்பைத் துலக்குக..
பகையை விலக்குக..

காகா.. கா..
காகா.. கா..
விடியலில் நானும்
கரைகின்றேன்..

காகா.. கா.. 
காகா.. கா..  
விடியட்டும் என்றே
கரைகின்றேன்..
***

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

நல்வாழ்த்துகள்..

மகிழ்ச்சியாக இருக்கின்றது...

எனும் சிறப்பான தளத்தில் 
செம்மையான பதிவுகளை வழங்கி வருகின்ற -

மதிப்புக்குரிய திரு ஹரிணி அவர்களுக்கு
குறள் நெறிச் செல்வர் 
எனும் விருது வழங்கப்பட்டிருக்கின்றது..


சிறப்புடைய விருது மேலும் சிறப்புடையதாகி இருக்கின்றது..

நேற்று மாலை தஞ்சையில் நடந்த -
உலகத் திருக்குறள் பேரவையின் 
நாற்பத்து மூன்றாவது ஆண்டு விழாவின் போது 
திரு ஹரிணி அவர்கள் 
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்..

இவ்விருது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது 
திருக்கரங்களால் வழங்கப்பட்டிருக்கின்றது..

இந்தச் செய்தியினை -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள் 
தனது FB  பக்கத்தில் பதிவு செய்திருந்தார்..

விடியற்காலையில் இச்செய்தியினைக் கண்டதுமே 
மனதில் மகிழ்ச்சி ததும்பியது..


இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் 
திரு கரந்தை JK அவர்களைத் தொடர்பு கொண்டு 
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்..

மேலதிக தகவல்கள் திரு கரந்தை JK அவர்களுடைய 
தளத்தில் வெளியாகும்..

பதினைந்து நாட்களாகவே எனக்கு உடல் நிலை சரியில்லை..

தலைவலியும் காய்ச்சலும் விட்டு விட்டு வருகின்றன...
தற்போது இங்குள்ள குளிர் காற்று ஒத்துக் கொள்ளவில்லை..

பதிவுகளில் மும்முரமாக இயங்குதற்கு 
சற்றே சிரமமாக இருக்கின்றது..

ஆயினும்,
அன்பு நண்பருக்கு அளிக்கப்பட்ட விருது மகிழ்ச்சியை 
அள்ளித் தந்திருக்கின்றது...

அந்த மகிழ்ச்சியுடன் தான் இன்றைய பதிவு..


தனக்கென்று ஒரு முத்திரையுடன்
தமிழ்ப்பணி ஆற்றி வரும் திரு ஹரிணி அவர்கள் 
மேலும் பற்பல சிறப்புகளை எய்திட வேண்டும் என்று 
மனமார வாழ்த்துகின்றேன்..



வாழ்க நலம்..
வாழ்க பல்லாண்டு..
***