நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை நான்காம் நாள்
தை அமாவாசை
அபிராமி அந்தாதி உதித்த நாள்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே.. 1
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினிவாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!.. 84
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப்
(அங்கையில்) பாசங்குசமும் கருப்பு(வில்லு)ம்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே..
**
ஓம் சக்தி ஓம்
***

தை அமாவாசை நாளில் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.......
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
அன்னை அபிராமி அனைவரையும் காக்க எனது பிரார்த்தனைகள்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
சக்தியை வணங்கி முக்தி பெற முயல்வோம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
தை அமாவாசையில் அபிராமி தரிசனம் அருமை.
பதிலளிநீக்குஅபிராமி அந்தாதி பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
திருக்கடையூரில் இன்று மிகவும் சிறப்பாக விழா இருக்கும்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
"அபிராமி என்தன் விழித்துணையே... அன்னை பாதம் அந்தாதி பாடி வணங்கினோம்..
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்.
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா