நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 26
குறளமுதம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.. 396
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.. 26
*
ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த
திருவெம்பாவை
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.. 16
ஸ்ரீ சுந்தரர் அருளிச் செய்த
தேவாரம்
திருகற்குடி
விடையா ருங்கொடியாய்
வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா
பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே. 7/27/1
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் ஹரி ஓம்
நம சிவாய
***


மார்கழி 26 ஆம் நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்...
திருப்பாவை, பொருளுடன் கீதா அக்கா தளத்தில் படித்து விடுவதால் இங்கு திருவெம்பாவையும், தேவாரமும், பன்னிரு திருமுறையும் படிப்பேன். வார்த்தைகளைப் பிரித்து படிக்க முடிகிறதா என்று பார்ப்பேன். அடுத்த முறையிலிருந்து நீங்களும் ஏன் இவற்றுக்கு பொருளும் சேர்ந்து கொடுக்கக் கூடாது?
பதிலளிநீக்குஆண்டாள் மனம் வைக்க வேண்டும்...
நீக்குசில வருடங்களுக்கு முன் என்னளவில் கருத்து சொல்லி பதிவிட்டிருக்கின்றேன்..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்