நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 05, 2026

மார்கழி 21

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 18

குறளமுதம்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.. 391

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்  பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 21
**
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருவெண்ணெய் நல்லூர்

பித்தாபிறை சூடீபெரு
மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.. 7/1/1
*
நன்றி
பன்னிரு திருமுறை
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

15 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழி 21 ஆம் நாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. ஒரு ஒளியைத் தொடர்ந்தோ அல்லது ஜஸ்ட் பார்த்தோ கண்களை மூடினாலே கண்ணுக்குள் சில வினாடிகள் வெளிச்சம் தங்குகிறது.  அருள் படைத்த பேராளன் உருவாய்க்கனால் கண்டு மனதில் இருத்துவது வாய்க்கப்பெற்றோர் பாக்கியவான்கள்.  ஏகாக்கிர சிந்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது முயன்றால் சித்திக்கக் கூடியதே...

      கருவறை தீபாராதனை இதற்கு உதாரணம்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா...

    இந்தக் காலத்தில் அப்படிப் பாலைப் ஏற்ற தீவனம் இல்லையே... மனிதர்களுக்கும் பகவான் மேல் அப்படி பக்தி இல்லாமல் போனது.

    பதிலளிநீக்கு
  5. உன் சக்தியைக் கண்டு பயந்து அல்ல, 
    அருளைக்கண்டு பயந்துருகி உன்னடி 
    தொழவந்தோம் கண்ணா..
    எல்லையற்ற பேருருவமாய் 
    அண்டமெங்கும் வியாபித்திருக்கும்
    பேரொளியாய் துலங்கும் உன் ஒளியில் 
    ஒரு துளி என மனதுக்குள் கொடு 
    பாத்திரங்கள் நிரம்பி வழிய 
    அரக்கரின் அராஜகம் அடக்கியது போல 
    எங்கள் மனதில் உள்ள 
    பாச மாயைகள் அகற்றி மாசுகள் களைய  
    பால் சொரியும் பசுக்கள் போல 
    நாங்கள் எங்கள் மனப் 
    பாத்திரம் நிரம்பி வழிய எமக்குன் 
    அருளைக் கொடு, கருணையைக் காட்டு  என்றும் 
    உன்னை முழுதும் அறியும் 
    ஞானத்தைக் கொடு என்றும் 
    வேண்டுகிறோம், சரணடைகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஸ்ரீராம்.

      மனப்பால் ஞானத்துப்பாலாகி
      மனதுள் சொரிந்திட...

      கீதா

      நீக்கு
    2. அருமை
      வெகு சிறப்பு...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. காலையில் தினமும் பார்த்துவிட்டாலும் கருத்துதான் கொடுக்கவில்லை துரை அண்ணா.

    கீதாக்காவுக்கும் கொடுத்திருந்தேன் பாருங்க அப்போது என்ன ஒரு பால் செழிப்பு.

    என் உறவினர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார். என் தங்கை அடிக்கடி அங்கு சென்று வருவாள். அப்போது அறிந்தது, அங்கு இப்பவும் மாடுகள் நிறையவாம். கறந்த பால் வாங்கித்தான் எல்லாமும் பாக்கெட் பால் வாங்குவதில்லை என்றும். வெண்ணை நெய் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கு என்றும் அறிய நேர்ந்தது. கறந்த பால் அவ்வளவு நன்றாக இருக்கிறதாம்.

    அதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அவ்வளவு பிரசித்தம் போலும்.

    அதே போல பல பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட்டிருக்கிறேன் அத்தனை சுவை.

    பெரும்பாலும் அங்கும் சரி தெற்குப்பக்கம் கோவில்களில் சர்க்கரைப் பொங்கலுக்குஅச்சுவெல்லம் சேர்ப்பதுண்டு. அது தனிச்சுவை, மணம் நிறம் கொடுக்கும்

    நானும் தெற்கில் இருந்தவரை சென்னைக்கு வந்த பிறகும் கூட அச்சுவெல்லம் சேர்த்துச் செய்வதுண்டு வீட்டில்.

    ஏற்றக் கலங்கள் என்றதும் பாலில் தொடங்கி கருத்து எங்க போய் முடியுதுன்னு சாப்பாடுதான்!!!!ஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகத்துவம் மிக்கவை திருப்பாவையின் வரிகள்..

      ஆண்டாள் திருவடிகளே சரணம்

      நீக்கு
  7. குறளமுதம், திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம் என பாடல்கள் பலவும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    திருவெண்ணை நல்லூர் இறைவா போற்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..