நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 31, 2020

வடிவேல் முருகா வருக..

ஸ்ரீ கந்த சஷ்டிக் கவசம்!..

துதிப்போர்க்கு வல்வினை போம்.. துன்பம் போம்!...
நூற்பயனை சொல்லிக் கொண்டு தொடங்கும் அற்புதப் பனுவல்..

கந்த சஷ்டிக் கவச பாராயணத்தால் விளையும் 
நன்மைகளைக் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை..

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் 
தேவராய ஸ்வாமிகளின் திருவாக்கில் விளைந்த ஞான நூல்..

கந்த சஷ்டிக் கவசம் சித்தியாகி விட்டால்
கோள்கள் மற்றும் கொடுநோய்கள் குறித்து அஞ்ச வேண்டியதில்லை..

ஏனெனில் -
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!.. - என்பது நூற்குறிப்பு..

தற்போது நம்மைச் சூழ்ந்துள்ள
கால நிலையை உத்தேசித்தால்
நமக்குக் கந்த சஷ்டிக் கவசமே காப்பு..
கந்தன் திருவடிகளே பாதுகாப்பு!...
***

ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அருளிய 
கந்த சஷ்டிக் கவசம்..

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்த சஷ்டிக் கவசந்தனை

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி..


சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதி வேலோன்
பாதமி ரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடனஞ் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்க என்றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

திருஆவினன்குடி 
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விண்பவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிரநிர நிரென 
வசர வணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்றென் முன் நித்தம் ஒளிரும்
சண்முகன் ஸ்ரீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக


ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திரு வயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
 ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

ஸ்ரீ ஸ்வாமிநாதன் 
என்றனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனித வேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

ஸ்ரீ ஓதிமலை ஆண்டவன் (சத்தியமங்கலம்) 
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஸ்ரீ குமாரஸ்வாமி - பண்மொழி
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் என்னை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

திருச்செந்தில்நாதன் 
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அன்னரும்
கனபூசை கொளும் காளியோட னைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

பழனியம்பதி வாழ் பாலகுமரன் 
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலறிக் குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோட
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

திருப்பரங்குன்றம் 
குத்து குத்து கூர்வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து யரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

ஸ்ரீ குமரகோயில் - (குமரி மாவட்டம்)
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்னும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து றவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

விராலிமலை 
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமரா
ஆவினன்குடி வாழ் அழகிய முருகா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்




வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளை யென்றன்பாய் பிரியம் அளித்து
 மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு


ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டத் திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் செயலது அருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
 எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாற் காண் வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லக்ஷ்மிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணிந்த கையதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்த முதளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...
சரணம் சரணம் சண்முகா சரணம்!..
***

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. சரணம் சரணம் சண்முகா சரணம்.
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு...
      வாழ்க வையகம்..

      நீக்கு
  2. கந்தா சரணம்,கதிர்வேலா சரணம்
    கடம்பா சரணம்.
    செவ்வாயில் செவ்வேளை வணங்கி
    எல்லா பாதுகாப்பையும் அடைவோம்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. முருகா சரணம் .....

    தினமும் துதிக்கும் கவசம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தினம் படிக்க வேண்டிய கவசம்.
    செவ்வாய் படிப்பது மிகவும் சிறப்பு.
    படங்கள் அழகு.
    காக்கவேண்டும் கந்தன் அனைவரையும்.
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  6. கந்தன் அருள் புரியட்டும். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே பெருகட்டும்...

      நீக்கு
  7. ஆஹா கந்த சஷ்டி கவசம். கவசமாக இருந்து உலகையே காக்க வேண்டும்.

    இப்போது வெளியில் நடைப்பயிற்சி செய்ய முடிவதில்லை என்பதால் வீட்டு மாடியில் தினமும் 8 போடுகிறோம் 40 நிமிடத்திற்கு அப்போது கந்தசஷ்டி கவசம் ஸ்கந்த குரு கவசத்தை மொபைலில் போட்டுவிட்டு நடை. எனவே ஒரே இடத்தில் நடப்பது அலுப்பு தெரியாமல் காதிற்கும் மனதிற்கும் இனிமையாய்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      நடை பயிற்சியில் 8 போடுவது நல்லது..
      40 நிமிடங்கள் எல்லாம் அதிகம் ...

      நான் சில நாட்கள் எட்டு போட்டேன்..
      அப்புறம் விட்டு விட்டேன்....

      சஷ்டி கவசம் அனைவரையும் காக்கட்டும்..

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. நடைப்பயிற்சியில் எட்டு போடும்போது தலை சுற்றல் வருகிறதே! நான் அவ்வளவாக அதை விரும்புவது இல்லை.

      நீக்கு
  8. முருகா...   செந்தில் முதல்வா...   வந்து காத்தருள் வையகத்தை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      வந்து காத்தருள்வான் வடிவேலன்...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. இந்தக் கவசம் பாடி உடல்நிலை குணம் அடைந்த தேவராய சுவாமிகள் அதன் பிறகு மற்ற படைவீடுகளுக்கும் கவசம் பாடினார் என்பார்கள். எல்லாமே அருமை. கௌமாரம் தளத்தில் எல்லாக் கவசங்களும் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..