நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 27, 2016

என்றும் நினைவில்..

ஜூலை 2002 ல்
டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள்
பாரதத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றபோது -

குடியரசுத் தலைவரின் மாளிகைக்கு எடுத்து வந்த பொருட்களை விட - 

ஜூலை 2007 ல்
பதவிக் காலம் முடிந்தது -
குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து
திரும்பியபோது எடுத்துச் சென்ற பொருட்கள் குறைவு.. 

15 அக்டோபர் 1931.,  27 ஜூலை 2015..









அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் ராமேஸ்வரத்திலிருந்து உற்றார் உறவினர்கள் புறப்பட்டு வந்தனர் - டெல்லிக்கு..

அவர்கள் டெல்லியைச் சுற்றிப் பார்ப்பதற்கு 
அரசு வாகனங்கள் எதையும் பயன்படுத்தாமல்
தனது சொந்த செலவில் பேருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார்..

ஜனாதிபதி மாளிகையில் -
அவர்களுக்கான சாப்பாடுச் செலவையும் 
தனது கைப் பணத்திலிருந்து -  அரசுக்கு செலுத்தியவர் - 

அப்துல் கலாம்!..

இது பாரதத் திருநாட்டின் வரலாற்றில் இல்லாத புதுமை!..


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.. (234)

நிலவுலகில் நெடுங்காலம் நிற்கவல்லதாக 
புகழ் மிக்க செயலைச் செய்தால் 
அவ்வாறு செய்தவரைத் தான் 
வானுலகம் போற்றிப் புகழும்..
***


இன்று முதலாண்டு அஞ்சலி..

வையம் உள்ளளவும் பேர் வாழ்க..
***

12 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான அற்புதமான வழிகாட்டியாய் விளங்கிய மாமனிதர் என்றால் மிகையல்ல. அருமையான புகைப்படங்களுடன் பதிவு...என்றும் நம் எல்லோரது நினைவிலும் வீற்றிருப்பார். நினைவில் வீற்றிருப்பதையும் தாண்டி அவர் கனவை நிறைவேற்றிட எல்லொரும் முயற்சி செய்தால் அது இன்னும் அவருக்குச் சிறப்பு சேர்க்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவர் கண்ட கனவை - அவரவரும் அவர்தம் நிலையில் முயற்சி செய்வதே சிறப்பு!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  2. மாமனிதர் நினைவு நாள் சிறப்புப் பதிவு வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம்,

    மிகையில்லா வார்த்தைகள், மாமனிதரின் நினைவினைப் போற்றுவோம்.

    குறள் பொருத்தம்,,

    பதிவு அருமை,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. புகைப்படங்கள் தங்கள் கைவண்ணத்தில் மிக மிக அழகு ,,,

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மீள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி
    அற்புதமான மனிதரின் நினைவு நாளைக்குறித்த பதிவு நன்று எனது பதிவை தயார் செய்து வைத்திருந்தேன் தேதியை மறந்து விட்டேன் அடுத்த வருடம் பார்க்கலாம்.
    புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      உண்மைதான்..

      வேலைத் தளத்தில் அரை வேக்காடுகளிடமிருந்து மீண்டு வந்து புதிய பதிவை ஆயத்தம் செய்வதற்குள் -

      உச்சந்தலையில் பூச்சிகள் பறக்கின்றன..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. மக்கள் நாயகர் கலாம் குறித்தான சிறப்பான பகிர்வு...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..