நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 04, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


மூடிக்கிடந்த கோயில் கதவுகளை திருநாவுக்கரசர் திறக்கவும்
ஞானசம்பந்தப் பெருமான் அடைக்கவும் பாடியருளிய
திருமறைக்காடு தலத்தில் சுந்தரர் பாடியருளிய
திருப்பதிகத் திருப்பாடல்.

யாழைப் பழித்தன்ன மொழி
  மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
  வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடே சென்று
  பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
  உண்ணும் மறைக்காடே... 7/71/1

யாழிசையைப் பழித்த  சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போன்ற சடைமுடியில் பிறை நிலவைச் சூடினவனும் ஆகிய இறைவனே...

உனது இருப்பிடத்தை அறிந்து வழிபட வேண்டின், 

அது, எளிய குரங்குகள் தாழம் புதர்களின் இடுக்கு வழியே, வாழைத் தோட்டத்தின் உள்
நுழைந்து, அங்கே  கனிந்திருக்கின்ற வாழைப் பழங்களைப் பறித்து உண்கின்றதான திருமறைக்காடு அல்லவா!..

இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்


க்ருஷ்ணாய வாசுதேவாய
கோவிந்தாய ஹரி ஓம்

ஓம் சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..