நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
புதன்கிழமை
திருக்கார்த்திகை
தீபத் திருநாள்
அண்ணாமலை தரிசனம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 10
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.. 2
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல் நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..3
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே..11
-: திருஞானசம்பந்தர் :-
திருச்சிற்றம்பலம்
நன்றி
பன்னிரு திருமுறை
தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்
அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணா மலைக்கு அரோஹரா..
**




தீபத் திருநாள் வாழ்த்துகள். அண்ணாமலையாருக்கு அரோகரா...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்..
தீபத் திருநாள் வாழ்த்துகள். அண்ணாமலையாருக்கு அரோகரா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள். அண்ணாமலையாரின் கோபுர தரிசனம் பெற்றேன். படங்களும், அருமை திருஞானசம்பந்தரின் பதிகங்களும் பாடி, அன்னை உண்ணாமலை சமேத அண்ணாமலையப்பரை மனதாற வணங்கி கொண்டேன். சர்வேஸ்வரன் மக்கள் அனைவரையும் காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா..
தீபத் திருநாள் வாழ்த்துகள். அண்ணாமலையாருக்கு அரோகரா...
அண்ணாமலையார் தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குஅண்ணாமலையாரே போற்றி போற்றி.