நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 22, 2022

ஏழூர் பெருமை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருமழபாடியில் பங்குனி புனர்பூசத்தில் நந்திகேசனுக்கும் சுயம்ப்ரகாஷினி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த பின் திரு ஐயாறு சித்திரைத் திருவிழாவில் விசாகத்தை அனுசரித்து நிகழும் ஏழூர் வலம் தான் சப்த ஸ்தானம் எனப்படுவது..

நந்தீசனும் தேவியும்

இத்திருவிழா ராஜராஜ சோழரின்  பட்டத்தரசியாகிய உலகமாதேவியார் அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றதாக சொல்லப்படுகின்றது..

ஆகையால் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து விளங்கும் பெருவிழா என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்..

ஆயினும், பன்னெடுங்காலமாகவே புகழ்  பெற்று விளங்கும் திருத் தலங்கள்  இவை என்பதில் ஐயமில்லை..  

சப்த ஸ்தானத் தலங்கள் அனைத்துமே பாடல் பெற்றவை எனில் அவற்றின் தொன்மை விளங்கும்..

சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும் ஏழூர்கள்..
1. திரு ஐயாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர் வீரட்டம்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்

இவற்றுள் திரு ஐயாறு, திருப்பழனம், திருநெய்த்தானம்
ஆகிய மூன்று தலங்களும் காவிரியின் வடகரைத் தலங்கள்.. ஏனையவை காவிரியின் தென்கரைத் தலங்கள்..

இவை ஏழினையும் ஒருங்கே தரிசித்து திருப்பதிகம் அருளிச் செய்திருப்பவர்
அப்பர் ஸ்வாமிகள்..

திரு ஐயாற்றில் இருந்து ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி பல்லக்குடன் நந்தீசன் பல்லக்கும் புறப்படும் போது இரண்டு.. 

திருப்பழனத்திற்கு வந்து அங்கிருந்து புறப்படும் போது  மூன்று பல்லக்குகள்..

அவை காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத் துறைக்கு வந்ததும் அங்கிருந்து நான்கு..

அவை திருவேதிகுடிக்கு வந்ததும் அங்கிருந்து ஐந்து..

திருக்கண்டியூரில் இருந்து புறப்படும் போது ஆறு..

திருப்பூந்துருத்தியில் இருந்து புறப்படும் போது ஏழு.. 

பல்லக்குகள் ஏழும் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து திருநெய்த்தானத்தை வந்தடைந்து  அங்கிருந்து புறப்படும்போது எட்டு.. 



எட்டு பல்லக்குகளையும் ஏக காலத்தில் தரிசிப்பது சிறப்பிலும் சிறப்பு.. நம்மையும் இறைவன் தரிசிக்க வைத்திருக்கின்றான்..


இவ்வேளையில் -
நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம்
ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யங்களைத் தந்தருள வேண்டும்என்று பிரார்த்தித்துக் கொள்வோம்..

இன்னும் பத்து நாட்களில் காவிரியில் நீரோடும்..


 ஓம்
பறையும்பழி பாவம்படு
துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு
சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானம் எனீரே.. 1/15/2
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

15 கருத்துகள்:

  1. ஐந்து, ஆறு, ஏழு படங்கள் வெகு அருமை. இறைவன் அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      அம்மையப்பனின் அருள் அனைவருக்கும் ஆகட்டும்.. மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  2. அழகிய தரிசனம் படங்களுடன் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. சிறப்பான தரிசனம். ஒவ்வொரு ஊராக பல்லக்குகள் சேர, கடைசியில் மொத்தம் எட்டு பல்லக்குகள். அனைத்தும் ஒரு சேர தரிசிக்க ஒரு வாய்ப்பு - படங்கள் வழி. மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து ஏழூர் உலா வந்தேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. மனதிற்கு நிறைவினைத் தரும். அதனை நான் உணர்ந்துள்ளேன். உங்கள் பதிவுகள் அந்த நினைவுகளுக்கு மெருகூட்டின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா.. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  5. எட்டு பல்லக்குகளையும் ஒரு சேர தரிசனம் செய்தது சிறப்புதான்.
    அருமையான தரிசனம் நாங்களும் செய்தோம்.இறைவன் எல்லோருக்கும் எல்லா நலங்களை வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. படங்கல் குறிப்பாகப் பல்லக்குகள் படமும் காவிரி மண்ணும் அழகு,

    எட்டுப் பல்லக்குகளும் ஒரு சேர தரிசனம் கிட்டியது சிறப்பான விஷயம் துரை அண்ணா,

    தென் கரை செல்லும் பல்லக்குகள் ஆறுகளைக் கடந்து சென்று மீண்டும் வட கரை திருநெய்த்தானம் ஆறுகளை மீண்டும் கடந்து வர வேண்டுமே என்று தோன்றிட பதிவிலும் தெரிந்து கொண்டேன். பாலங்கள் இருக்கும் இல்லையா? அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுகளில் பாலங்கள் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. படங்கள் வழியாவது தரிசிக்க முடிந்ததே! காவிரியின் மணற்பரப்பு அந்தக் காலத்து அரிசிலாற்றை நினைவூட்டுகிறது. இப்போப் பார்க்கச் சகிக்கவில்லை. ஊர்ப் பக்கம் போகும்போதெல்லாம் இதைக் குறித்துப் புலம்புவதோடு சரியாப் போகிறது! கையாலாகாத்தனம்! :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..