நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 05, 2020

திருக்குடமுழுக்கு

இன்று தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரத்தின்
ஸ்ரீ தக்ஷிண மேருவுக்குத் திருக்குடமுழுக்கு...

யாகசாலையில் ஸ்வாமி அம்பாள், 41 உற்சவமூர்த்திகள்
எட்டு பலி பீடங்கள், பத்து நந்திகள், 22 கோயில் கலசங்கள் - 
என மொத்தம் 405 மூர்த்திகளுக்கு உரிய 705 குடங்கள்.. 

இன்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாவது யாகசாலை பூஜையும் பூர்ணாஹூதியும் மகாதீப ஆராதனையும் நிறைவேறிய பின் -

காலை 7:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு
ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள்ளாக
மகாகும்பாபிஷேகம் நிகழ இருக்கின்றது...

காலை பத்து மணிக்குப் பிறகு
ஸ்ரீ பெருவுடையாருக்கும் ஸ்ரீ பிரஹந்நாயகி அம்பிகைக்கும்
மஹா அபிஷேகம்... பெருந்தீப வழிபாடு...

இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி எழுந்தருளல்...







காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமையவாட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.. 
-: திருநாவுக்கரசர் :-





அழகிய படங்களை வலையேற்றி வைத்த
நல்லோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


மங்கலகரமான இவ்வேளையில்
அனைத்துலகும் இன்பமுற ஐயனின்
திருவடிகளைப் போற்றி நிற்போம்...

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே..
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

19 கருத்துகள்:

  1. கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விழித்த பழைய நாட்கள் சட்டென நினைவுக்கு வந்தன.

    தஞ்சை கோலாகலமாக இருக்கும்.திருவிழா...    ப்ரகதீஸ்வரன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  நாடும் மக்களும் நலம்பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  2. மதுரைக்கோயில் கும்பாபிஷேஹத்தை வீட்டு மொட்டை மாடியில் இருந்தே பார்த்த அனுபவங்கள் நினைவில் வருகின்றன. இன்று தஞ்சையே கோலாகலமாகக் காட்சி அளிக்கும். அருமையான படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்களை தந்து தரிசிக்க வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  4. தஞ்சையில் பிறந்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  6. காலையில் தொலைக்காட்சியில் கண்டுகளித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  7. இன்று காலை சென்று முழுமையாக குடமுழுக்கினைக் கண்டேன் ஐயா. அது தொடர்பாக என் வலைதளத்தில் எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான படங்கள்.

    சில காட்சிகளை இணையம் வழி கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..