நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 19, 2017

மார்கழிக் கோலம் 04

தமிழமுதம் 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.. (10)
***

அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை 
திருப்பாடல் 04 


ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.

ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை
தித்திக்கும் திருப்பாசுரம்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி 
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன் 
நாராயணா எனும் நாமம்..(953)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருமணஞ்சேரி


இறைவன் - ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்பிகை - கோகிலாம்பிகை


தல விருட்சம்
வன்னி, கொன்றை, கருஊமத்தை
தீர்த்தம் - சப்த சாகரம்


ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

துன்னு வார்குழலாள் உமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே!..(5/87)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய 
திருப்பள்ளியெழுச்சி 
திருப்பாடல் 04

ஸ்ரீ சங்கரநாராயணன்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவ பெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் சகோ!

    4 ஆம் நாள் திருப்பாவை, திருவெம்பாவையுடன் தேவாரம், மற்றும் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்துடன் இறைவன் தரிசனம் அருமை....தலப்படங்களும் வெகு சிறப்பு சகோ..

    ஆழிமழைக்கண்ணன் மாதம் மும்மாரி பெய்ய வைக்கவில்லை என்றாலும் கொஞ்சமேனும் மழை பொழிய வைத்து நம் பூமியைக் காக்க வேண்டிடுவோம்.

    சென்னையில் மீண்டும் தண்ணீர் லாரிகள் வரத் தொடங்கிவிட்டன...ஸ்ரீராம் இதைச் சொல்லியிருந்தார் ஒரு பின்னூட்டத்தில்...வந்துவிடும் என்று அதே போல வந்துவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    நான்காம்நாள் தரிசனம் கண்டேன்
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  3. காலையில் மிக அருமையான தரிசனம்! மிக்க நன்றி பகிர்விற்கு. அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதால் பதிவுகள் வாசிக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...அவ்வப்போது சில பதிவுகள் தான் வாசிக்க முடிகிறது..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. சங்கரநாராயணன் என்று பெயர் கொண்டவர்களை அறிவேன். இப்போதுதான் சங்கரநாராயணன் இறை வடிவைக் காண்கிறேன்.

    கல்யாண சுந்தரேஸ்வரர் படம் அழகு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய தரிசனம்....

    தோழனோடும் ஏழ்மை பேசேல்...அருமை

    பதிலளிநீக்கு
  6. ஒழுங்காகப் படித்து வந்தால் திருப்பாவையும் திருவெம்பாவையும் கை கூடும்

    பதிலளிநீக்கு
  7. அருமை. தொடரட்டும் மார்கழி பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஆம், எனக்கும் சங்கரநாராயணன் என்கிற பெயரில் ஒரு இளவயது நண்பர் உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..