நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 30, 2016

தஞ்சை தேரோட்டம்

தஞ்சை பெரிய கோயில்
சித்திரைத் திருவிழாவின் மகா ரதம்..

பதினைந்தாம் திருநாள் (18/4) திங்களன்று 
நிகழ்ந்த தேரோட்டத் திருக்காட்சிகள்.

விடியற்காலை 5.30 மணியளவில் ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் சோமாஸ்கந்த மூர்த்தியாக மூலஸ்தானத்திலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளினார்..


மகா தீப ஆராதனைக்கு நிகழ்ந்ததும் -
காலை ஏழு மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது..








பக்தர்களின் பஞ்சாட்சர முழக்கத்துடன் தேரடியிலிருந்து புறப்பட்டது திருத்தேர்..

ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக -
திருத்தேர் பதினான்கு இடங்களில் நிறுத்தப்பட்டது.

மேல ராஜவீதியில் -

1) ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் (உக்கடை அம்பாள் பள்ளி அருகில்)
2) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் 
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
3) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில்

ஆகிய இடங்களிலும்,



வடக்கு ராஜவீதியில் -

4) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில்
5) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
6) ஸ்ரீ குருகுல ஆஞ்சநேயர் திருக்கோயில் (FCI அருகில்)

ஆகிய இடங்களிலும் தேர் நின்று செல்லும்.



தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -

7) ஸ்ரீமாரியம்மன் கோயில் (கொடிமரத்து மூலை)
8) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்)
9) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில்
10) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும்

ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை
தெற்கு ராஜவீதியில் -

11) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
12) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர் திருக்கோயில்
13) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
14) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும் திருத்தேர் நிறுத்தப்பட்டு பக்தர்களால் வழிபடப்பட்டது.


தேரோட்டத்தில் முன்னதாக ஸ்ரீ விநாயகப் பெருமானும்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமானும்
அலங்கார சப்பரங்களில் எழுந்தருளினர்..

மகாரதத்தினை அடுத்து அம்பிகை திருநிலைநாயகியாக எழுந்தருளினாள்..

தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார்..

ராஜவீதிகளில் கம்பீரமாக வலம் வந்த திருத்தேர் -
மதியம் 12.50 மணிக்கு மேலராஜவீதி தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்திற்குப் பிறகு - தொடர்ந்த திருவிழாவில் -
பதினாறாம் திருநாளான 19/4 அன்று காலையில் முத்துப் பல்லக்கு.
மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.

பதினேழாம் திருநாளான 20/4 அன்று ஸ்ரீ தியாகராஜர் தோரணப் பந்தலில் தரிசனம் நல்கினார்..



பதினெட்டாம் திருநாளான (21/4) அன்று ஸ்ரீ தியாகராஜர் ருத்ரபாத மூர்த்தியாக யதாஸ்தான பிரவேசம்.

அதைத் தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரியுடன் திருவீதியுலா.

மதியம் ஸ்ரீ சந்திர சேகரர் திருச்சுற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்ததைத்
தொடர்ந்து மாலையில் - துவஜ அவரோகணம் நடைபெற்றது...

ஸ்ரீ பிரகதீஸ்வரர் பிரஹந்நாயகியுடன் பெரிய ரிஷபத்தில் எழுந்தருள -
பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அந்த அளவில் மங்கலகரமாக சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.
***

சில தினங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய பதிவு - இது..
இணைய இணைப்பில் தடையேற்பட்டதனால் தாமதமாகி விட்டது..
***

உலகெலாம் தொழவந் தெழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே!..
-: அருட்சித்தர் கருவூரார் :-

நலம் வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

6 கருத்துகள்:

  1. மனைவியால் நேரில் சென்று தேரோட்ட நிகழ்வுகளைப் பார்த்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி அழகிய விளக்கவுரையுடன் நானும் தஞ்சை தேரோட்டம் கண்டேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. நேரில் சென்று வந்த சந்தோஷம் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. நண்பரே உங்கள் பதிவுகளில்
    நிறைய திருவிழாக்களை நேரில்
    பார்த்த உணர்வுகள் எங்களுக்குள்...

    பதிலளிநீக்கு
  5. சென்றோம், பார்த்தோம், ரசித்தோம் அன்று. இன்று உங்கள் பதிவு மூலமாக. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான தேர்திருவிழா படங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..