நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
கண்ணாடி சரியாக அமையாததாலும்
வேறு சில அடிப்படை பிரச்னைகளாலும்
எழுத்துப் பணியில் சற்றே தளர்வு..
சின்னச் சின்ன பதிவுகளைத் தவிர்த்து
சிறுகதைகளையோ சமையல் குறிப்புகளையோ தருவதற்கு இயலவில்லை..
எப்போது பிரச்னைகள் தீரும்?
தெரியவில்லை..
இந்நிலையில்
நெஞ்சை நெகிழ்வித்த அன்பின் கருத்துரைகள்
இன்று..
கமலாஹரிஹரன்
(சில மாதங்களுக்கு முன்பு எபி யில் வழங்கிய கருத்து)
வணக்கம் சகோதரரே .
/நான் எபியில் படத்திற்கு கதை என்பதாக அப்பாவின் மகள் என்றொரு கதை எழுதியிருக்கின்றேன்../
மீள் வருகை தந்து தந்த தங்களின் அன்பான தகவல்களுக்கு நன்றி. நீங்கள்தான் எ. பியில் அருமையான பல குடும்பக் கதைகள், அறிவார்ந்த யதார்த்தமான பல கதைகள், பக்தியும், வாய்மையும் நிச்சயம் ஒருநாள் வெற்றியை சந்திக்கும் என்னும்படியான கதைகள் என நிறைய கதைகள் எழுதியிருக்கிறீர்களே..! எல்லாமே நாங்கள் மிக விரும்பி படித்திருக்கிறோம்.
உங்கள் கதைகளை ஆர்வத்துடன் படித்து உங்கள் எழுத்துகளை கண்டு வியக்கும் ஒரு வாசக, வாசகிகளில் நானும் ஒருத்தி. . . இப்போது நீங்கள் குறிப்பிட்ட கதையையும் நான் படித்திருப்பேன். முதல் பாராவை பார்த்தால் நினைவு வந்து விடும். இப்போது உங்களின் கண் பார்வை குறையினால் நீங்கள் அதிகம் எழுதவில்லை. உங்கள் திறமை மிகுந்த எழுத்துக்களை நாங்களும் மிகவும் மிஸ் செய்கிறோம். கூடிய விரைவில் தங்கள் கண்கள் நலமடைந்து பல கதைகளை தாருங்கள் படித்து ரசிக்க காத்திருக்கிறோம். உண்மையில் எங்களுக்கு அதுதான் பொற்காலம். விரைவில் அக்காலம் திரும்பட்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலாஹரிஹரன்.
அன்பின் ஸ்ரீராம் அவர்களது பதிவில் எழுதிய கருத்து..
துரை செல்வராஜூ
16/10/25 3:05 PM
நகைச்சுவை துணுக்குகளை தவிர்த்து விட்டேன்...
கண்ணாடியின் தடுமாற்றத்தில்
கைத்தல பேசியில் இவ்வளவு தான் முடிகின்றது..
பதிலளிநீக்கு
பதில்கள்
ஸ்ரீராம்.
16/10/25 3:09 PM
பரவாயில்லை. 'கண்பார்வை கோளாறை சரி செய்து விட்டேன்' என்னும் உங்கள் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்.
நெல்லைத் தமிழன்
16/10/25 3:38 PM
விரைவில் சரியாகி விடும் துரை செல்வராஜு சார்..
-::-
இப்படியான அன்பின் வார்த்தைகள்
நெருக்கடியான சூழ்நிலையில்
ஆறுதலாக இருக்கின்றன..
அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றியும்
வணக்கமும் என்றும் உரியன..
வாழ்க நலம்
சிவாய நம ஓம்
**
விரைவில் சரியாகி விடும். சரியாக வேண்டும் என்று நானும் பிரார்தித்துக் கொள்கிறேன் செல்வாண்ணா.
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்தும் அன்பின்
நீக்குபிரார்த்தனையும்
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்