நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 10, 2019

தீபத் திருநாள்

அண்ணாமலை..

திரு அண்ணாமலை..

அக்னித் தலம்..

ஆதி அந்தம் அறிய ஒண்ணாத அற்புதத் தலம்..

நான்முகனுடனும் ஹரிபரந்தாமனுடனும் -
ஈசன் திருவிளையாடல் கொண்டு இலங்கும் திருத்தலம்..

அம்பிகைக்கு இறைவன் தனது திருமேனியில்
சரிபாதியினை - அருளிய திருத்தலம்..


எண்ணரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில்
வெகுசிறப்புடன் நிகழ்வது திருக்கார்த்திகைத் திருவிழா..

தீபத் திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன..

எப்படியிருப்பினும், தீபம் ஏற்றப்படுவது - ஒளியின் பொருட்டு!..

அதன்மூலம் வழியின் பொருட்டு!..

தீப ஒளியினால் - புற இருள் அகல்கின்றது..

அவ்வண்ணமாக - அகத்தில் ஒளி பெருக வேண்டும்..

இதுவே திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதலின் சிறப்பு..


தங்கக் கொடிமரத்தில்
திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் திருவீதி எழுந்தளினர்..




வெள்ளித் தேரோட்டமும் மகாரதங்களின் பவனியும் நடைபெற்றது..

நேற்று மூலவர் சந்நிதியில் மகாபரணி தீபம் ஏற்றப்பட்டதுடன்
இன்று மாலை ஆறு மணியளவில் ஆண்டுக்கொருமுறை நிகழும் அற்புதமாக ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கொடி மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அவ்வேளையில், ஏக காலத்தில் -
கொடி மரத்தின் முன்னுள்ள அகண்டத்திலும் அண்ணாமலையின் சிகரத்திலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது..

மலை மீது ஏற்றப்படவுள்ள
தீபக் கொப்பரை

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் -
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியும் ஸ்ரீ அண்ணாமலையாரும் எழுந்தருள்கின்றனர்..


வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மருகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு!..

- காண வருவாய் பூம்பாவாய்!.. - என, திருமயிலையில் அருளுகின்றார் திருஞான சம்பந்தப்பெருமான்..

தீபமேற்றுதலும் அது கொண்டு ஈசனை வழிபடுதலும் பாரம்பர்ய நிகழ்வு..

அதன் பயன் - மனம் ஒன்றுபடுதல்.. ஒடுங்குதல்..

அதன் மூலம் அன்பு கொண்டு அகிலத்தின் சகல உயிர்களுக்கும் ஆதரவளித்தல்..

அதுவே பிறவிப் பயன்!..

அதனை எய்துதற்கே - ஆன்றோர்கள் வழிகாட்டுகின்றனர்..

தேவாரத்திலும் திருவாசகத்திலும் எண்ணற்ற இடங்களில்
ஜோதி மயமானவன் என்றே இறைவன் போற்றப்படுகின்றான்..


வையம் தளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று!.. (2082)
-: பொய்கையாழ்வார் :-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்!.. (2182)
-: பூதத்தாழ்வார் :-

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-

இல்லத்திலும் உள்ளத்திலும் 
விளக்கேற்றுவோம்!..

திருக்கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!..


அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி..
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!..
-: வள்ளலார் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

20 கருத்துகள்:

  1. மிக அருமை. இந்தியாவில் இருந்தால் திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்துக்கொண்டே விளக்குகள் ஏற்றுவோம். நாளைக்குக் காலை/உங்களுக்கு/இந்தியாவில் மாலை தீபம் ஏற்றும்போது பார்க்கணும். முடியுமானு தெரியலை. அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. திருவண்ணாமலை தீபம் குறித்து முன்னால் எழுதினவற்றைத் தேடிப் பார்க்கணும். இப்போல்லாம் எழுதுவது இல்லை. பொதுவாகவே எழுதுவது குறைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களெல்லாம் எழுத வேண்டும் என்பதே ஆவல்..

      தீபத்திருநாள் வாழ்த்துகள்....

      நீக்கு
  3. தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத்திருநாள் வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத்திருநாள் வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பகிர்ந்த பாடல்களும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. தீபத்திருநாள் நல் வாழ்த்துகள்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  8. தீப ஒளித்திரு நாளுக்கு வாழ்த்துகள் .அனைவர் வாழ்வும் நலம் பெறட்டும். கீதாமா சொல்வது போல்
    அத்தனை தீப நிகழ்வுகளும் மனதில் ஓடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  9. ஸ்ரீ அண்ணாமலையாரே போற்றி போற்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. தீபத்திருநாள் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி ஜி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..