நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 30, 2024

ஊற்றத்தூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 16  
ஞாயிற்றுக்கிழமை


திருத்தலம்
திருஊற்றத்தூர்

இறைவன்
ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம்
வில்வம்

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று இன்றைய நாளில் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

இந்தக் கோயிலில் தான் உலகிலேயே  அரிதான, பஞ்சநத கல்லில் வடிக்கப்பட்ட
நடராஜர் விளங்குகின்றார்..

பஞ்சநத நடராஜர்..

அதென்ன பஞ்சநத நடராஜர்!..


ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், கஜ நதனம், யாழி நதனம்  - என்ற ஐந்து வகையான கற்களில் பஞ்சநதனம் என்பது ஒளி வீசும் தன்மை உடையது..

ஸ்ரீ சிவகாமசுந்தரி
மிகவும் அரிதான, இந்த பஞ்சநத கல்லில் செய்யப்பட்டது தான் இக்கோயிலின் நடராஜர் திருமேனி. 

பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வருகின்ற ஆரோக்கியக் கதிர்களை ஈர்த்து வைத்து வழங்குகின்ற ஆற்றல் உடையனவாம்.. 

இந்த வகைக் கல் தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதனப் பாறையினால்  நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என்ற போற்றப்படுகின்றது..

இன்றைய ஊட்டத்தூர் முற்காலத்தில் ஊற்றத்தூர்.. 
வரலாற்றுச் சிறப்புடன் விளங்கிய ஊர்..

ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்  ராஜராஜ சோழரின் திருப்பணி.. 

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடாலூர் என்ற ஊரில் இருந்து நான்கு கிமீ. தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.. 

ராஜராஜ சோழன் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகச்  சொல்லப்படும் இந்தக் கோயில்  பற்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

இந்தக் கோயிலில் வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. 

மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்!..

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து என - இத்தலத்தின் இறைவனான  ரத்தினேஸ்வரர். 

வருடந்தோறும் மாசி மாதம் 12,13,14 ஆம் நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படர்கின்றன.. 

பஞ்சநதனக் கல்லிற்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக சித்தர்கள் திருவாக்கு..  

பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை அணிவித்துப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து - அந்த தீர்த்தத்தை நாற்பத்தெட்டு நாட்கள் பருகினால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி அம்மனையும்
 நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வேண்டும் என்று வணங்கி  வருவோம்...

இப்பதிவினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

அப்பர் பெருமான் 
இத்தலத்தினை வணங்கியுள்ளார்... 

ஆயினும் 
தனியான திருப்பதிகங்கள் 
கிடைக்கப் பெறவில்லை..

ஊற்றத்தூர் சொல்லப்பட்டுள்ள திருவூர்த் தொகை (க்ஷேத்ரக் கோவை) யின் இரண்டு திருப்பாடல்கள்..


நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.. 6/70/10..

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழ இடர்கள் தொடரா அன்றே.. 6/71/4
-: திருநாவுக்கரசர் :-

ம் நம சிவாய
சிவாய நம ஓம் 
*** 

திங்கள், ஜூலை 06, 2020

கோபுர தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருமயிலை 
ஸ்ரீ கபாலீச்சரத்தின்
கோபுர தரிசனம்...

சென்னையிலுள்ள
எனது மைத்துனர் வாட்ஸ் அப்
வழியாக அனுப்பியவை..

அழகழகான படங்களை
எடுத்தவர் யாரென்று
தெரியவில்லை..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..








 மங்குல் மதிதவழும் மாடவீதி
மயிலாப்பிலுள்ளார் மருகலுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார்
குற்றாலத்தார் குடமூக்கில்
உள்ளார் போய்க் கொள்ளம்பூதூர்த்
தங்கும் இடம் அறியார் சால நாளார்
தருமபுரத்துள்ளார் தக்களூரார்
பொங்கு வெண்ணீறணிந்து
பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலமே
புக்கார் தாமே.. (6/2)
-: திருநாவுக்கரசர் :-



ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ