திருஏரகம் எனும் சுவாமிமலை திருக்கோயிலில் இன்று காலை திருக்குடமுழுக்கு விழா இனிதே நிகழ்ந்தது..
பெருந்திரளான பக்தர்கள் அதிகாலை முதல் குழுமியிருக்க -
குறித்த நேரத்தில் வெகு சிறப்புடன் -
ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியின் திருமூலஸ்தான விமானத்திற்கும்
ஏனைய பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும் ராஜகோபுரங்களுக்கும் திருக்குடமுழுக்கு செய்விக்கப்பெற்றது..
அதிகாலை நான்கு மணி அளவில் - ஆறாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின..
மங்கல வேள்வியில் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நிகழ்ந்ததும் -
புனித நீர் நிறைந்த கடங்கள் புறப்பாடாகின..
திருப்புகழ் மற்றும் வேத பாராயண - மங்கல வாத்திய முழங்கங்களுடன்
யாக சாலையிலிருந்து புறப்பட்ட கடங்கள் - திருக்கோயிலை வலம் வந்தன.
தொடர்ந்து - திருக்கோயிலில் ஸ்ரீ சுவாமிநாதப் பெருமான் சந்நிதி தரிசனமும் பிரசாதமும் வழங்கப்பெற்றது..
இன்று மாலை 5.00 மணியளவில் -
ஸ்ரீ சுவாமிநாதப் பெருமானுக்கு மகா அபிஷேகம்.. அலங்கார தீபாராதனை..
இன்று இரவு 8.00 மணியளவில் பஞ்சமூர்த்தி திருவீதி எழுந்தருளல்..
திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வழங்கிய திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் உரியன..
மேலும் -
இன்றைய இளங்காலைப் பொழுதிலேயே - இன்னுமொரு இனிய நிகழ்வாக,
திருக்குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயிலிலும் மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ந்திருக்கின்றது..
அன்பிற்குரிய ஐயா திரு. ஜம்புலிங்கம் அவர்கள், திருக்குடமுழுக்கினைத் தரிசித்ததோடு - சில படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்..
அவற்றுடன் மேலும் சில படங்களையும் வழங்குவதில் - இன்றைய பதிவில் மகிழ்வெய்துகின்றேன்..
அன்பின் திரு. Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
பெருந்திரளான பக்தர்கள் அதிகாலை முதல் குழுமியிருக்க -
குறித்த நேரத்தில் வெகு சிறப்புடன் -
ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியின் திருமூலஸ்தான விமானத்திற்கும்
ஏனைய பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும் ராஜகோபுரங்களுக்கும் திருக்குடமுழுக்கு செய்விக்கப்பெற்றது..
அதிகாலை நான்கு மணி அளவில் - ஆறாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின..
மங்கல வேள்வியில் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நிகழ்ந்ததும் -
புனித நீர் நிறைந்த கடங்கள் புறப்பாடாகின..
திருப்புகழ் மற்றும் வேத பாராயண - மங்கல வாத்திய முழங்கங்களுடன்
யாக சாலையிலிருந்து புறப்பட்ட கடங்கள் - திருக்கோயிலை வலம் வந்தன.
காலை 6.30 மணியளவில் - திருமூலஸ்தானம் உள்பட அனைத்து விமானங்களும் மங்கலகரமாக திருக்குடமுழுக்கு நடைபெற்றது..
பரவசத்துடன் கூடியிருந்த பக்தர்களின் மீது புனித நீருடன் மலர்களும் தெளிக்கப்பட்டன..
தொடர்ந்து - திருக்கோயிலில் ஸ்ரீ சுவாமிநாதப் பெருமான் சந்நிதி தரிசனமும் பிரசாதமும் வழங்கப்பெற்றது..
இன்று மாலை 5.00 மணியளவில் -
ஸ்ரீ சுவாமிநாதப் பெருமானுக்கு மகா அபிஷேகம்.. அலங்கார தீபாராதனை..
இன்று இரவு 8.00 மணியளவில் பஞ்சமூர்த்தி திருவீதி எழுந்தருளல்..
திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வழங்கிய திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் உரியன..
* * *
மேலும் -
இன்றைய இளங்காலைப் பொழுதிலேயே - இன்னுமொரு இனிய நிகழ்வாக,
திருக்குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயிலிலும் மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ந்திருக்கின்றது..
அன்பிற்குரிய ஐயா திரு. ஜம்புலிங்கம் அவர்கள், திருக்குடமுழுக்கினைத் தரிசித்ததோடு - சில படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்..
அவற்றுடன் மேலும் சில படங்களையும் வழங்குவதில் - இன்றைய பதிவில் மகிழ்வெய்துகின்றேன்..
![]() |
| திரு. Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி |
![]() |
Photo By Dr. B.Jambulingam
|
![]() |
Photo By Dr. B.Jambulingam
|
பொங்கும் மகிழ்வும் உற்சாகமும் எங்கும் தங்கிட
இறையருள் துணையிருப்பதாக..
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி திருவடிகள் போற்றி..
* * *






































