நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 03, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

இன்று
தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
  லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
  செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
  யேன் மறந்து உய்வனோ.. 5/2/2

பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை  சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை  உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை  பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..