நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 6
புதன்கிழமை
காசியம்பதிக்கு சமமானதாகச்
சொல்லப்படும் ஆறு தலங்களுள்
ஆறாவது திருத்தலம்..
விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..
திருவாஞ்சியம்
இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர்
அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
தீர்த்தம் குப்த கங்கை
தல விருட்சம் சந்தன மரம்.
மரண பயத்தை - யம பயத்தை போக்குகின்ற தலம் திருவாஞ்சியம் எனப்படும் ஸ்ரீவாஞ்சியம்..
சிவபெருமானை மதிக்காமல்
தட்சனின் நடத்திய யாகத்திற்குச் சென்ற சூரியன் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு தனது ஒளியை இழந்தான்..
இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த குப்த கங்கையில் நீராடி சூரியன் மீண்டும் ஒளி பெற்றதால் தலபுராணம்..
திருமகளைப் பிரிந்த மஹாவிஷ்ணு இங்கே வழிபட்டு மீண்டும் திருமகளை அடைந்தார்..
யமதர்மன் தான் உலக உயிர்களைக் கவர்ந்து எடுப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வருத்தமுற்று ஈசனை நோக்கித் தவம் இயற்றினார்..
ஈசன் காட்சி தந்து யமதர்மனின் மன உளைச்சலைத் தீர்த்தருளினார்.. இதனால் மகிழ்ந்த யமதர்மன் சிவசக்தியாகிய அம்மையப்பனை தோளில் தாங்கி வலம் வந்தார்..
இக்கோயிலில் யம தர்ம வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருள்கின்றார்..
கோயிலில் யமதர்மன் சித்ர குப்தன் இருவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்..
இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தால் போதும்.. கயிலாயத்தில் சிவ கணமாக விளங்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது தல வரலாறு..
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..
இங்கே மரணத்தீட்டு எனில் கோயில் அடைக்கும் வழக்கம் இல்லை..
திரு ஆரூரை அடுத்துள்ள
நன்னிலத்தில் இருந்து 9 கிமீ., தூரத்தில் ஸ்ரீவாஞ்சியம்..
ஆறு ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை தரிசித்திருக்கின்றேன்..
கையி லங்குமறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யார் அடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதமடை வார்க்கடையா அரு நோய்களே.. 2/7/5
-: திருஞானசம்பந்தர் :-
அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க்கு அமரரே.. 5/67/4
-: திருநாவுக்கரசர் :-
வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9
-: சுந்தரர் :-
திருவாஞ்சியத்தில்
சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு
மகிழ்ந்த வண்ணமும்
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***




































.jpg)
