நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 24, 2025

அன்பில திவ்ய தேசம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை

இன்று
அன்பில் 
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் தரிசனம்..

காவிரி தீரத்தில்
பெருமாள் பள்ளி கொண்டு  விளங்குகின்ற தலங்களில்  அன்பில் திவ்ய தேசமும் ஒன்று..

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருக்கோலம். பெருமாள் தாரக விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக சயனத் திருக் கோலம் கொண்டுள்ளார்..

மூலவர் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள்

தாயார் அழகிய வல்லி
உற்சவர் வடிவழகிய நம்பி
மண்டூக தீர்த்தம்
தல விருட்சம் தாழம்பூ

மண்டூக மகரிஷியின் சாபம் தீர்ந்த தலம்..
திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்..

மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.
தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை -  திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..













ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
**

4 கருத்துகள்:

  1. அன்பில் சுந்தரராஜப் பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    நமோ நாராயணாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  2. அன்பில் என்றால் ஒரு அரசியல் தலைவர்தான் நினைவுக்கு வருவார்.  அங்கே  அழகிய பெருமாள் இருக்கிறார் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..