நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 09, 2022

மணிக் குன்றில் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை வெண்ணாற்றங்கரை ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் உடன் உறையும் ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாள் திருக் கோயிலில் நேற்று முன் தினம் சனிக்கிழமை சித்திரை 24 (7/5) அன்று காலை  மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு கட ஸ்தாபனம் செய்யப்பட்டு யாக பூஜையுடன் திருமஞ்சனமும் மாலையில் திருக் கல்யாண வைபவமும் நடைபெற்றது..

















நிகழ்வுகளை இயன்றவரை இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்..
இதன் தொடர்ச்சியை நாளைக்குக் காணலாம்..
**

தூணொன்றில் தான் தோன்றி வந்தான் தன்னை
நாணொன்றில் கணை தொட்டு வென்றான் தன்னை
மண்கொண்டு விண்ணையும் அளந்தான் தன்னை
கண்கொண்டு மாமணிக் குன்றில் கண்டேன்..
*
ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா சமேத
ஸ்ரீ மணிக்குன்ற ஸ்வாமிநே நமோ நம:

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***

17 கருத்துகள்:

  1. ஓம் நமோ நாராயணாய... படங்கள் வாயிலாக தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அழகிய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  4. படங்கள் வாயிலாகக் கிடைத்த அற்புதமான தரிசனத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மண்டலாபிஷேக பூர்த்தியில் கலந்து கொண்டது நல்லது.
    படங்கள் மூலம் நாங்களும் கலந்து கொண்ட நிறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மணிக்குன்றப் பெருமாளை மன நிறைவுடன் தரிசித்து கொண்டேன். மண்டலாபிஷேக படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. யாக பூஜைகளில் நாங்களும் கலந்து கொண்ட மகிழ்வை தந்தன. மணிக்குன்றப் பெருமாளும், அம்புஜவல்லி தாயாரும், நம்மை நோய் நொடியின்றி ஆரோக்கியமாக காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்தேன். சிறப்பான நிகழ்வுகளை நீங்கள் பகிந்து கொள்ள நாங்களும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட உணர்வு. மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  8. என்னோட பெயர்/சுய விபரம் எழுதித் தட்டச்சினால் தவறான நபர்.தவறான விபரங்கள் என்று வந்து விட்டது. ஆகவே அநாமதேயமாகவே கருத்துச் சொல்லணும் போல!:))) கீதா சாம்பசிவம்.

    பதிலளிநீக்கு
  9. ஹாஹாஹா, ஏற்கெனவே வெளியிட்டக் கருத்துப் போகலை. ஆனால் பின் தொடரும் கருத்துக்கள் மட்டும் வரவே மறுபடி முயற்சி செய்தால் அநாமதேயத்தின் பெயரில் கொடுத்த கருத்து மட்டும் என்னோட பெயரிலேயே வந்திருக்கு. என்ன ஆச்சோ இந்த ப்ளாகருக்கு?

    பதிலளிநீக்கு
  10. ஹாஹாஹா கருத்துக்கள் காணாமல் போகின்றன! பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  11. மண்டலாபிஷேஹப் பூர்த்திப் படங்களுக்கும் மற்ற விபரங்களுக்கும் மிக்க நன்றி. இது போகுமா பார்ப்போம். :( ஏற்கெனவே கருத்துப் போட்டதற்கான அடையாளம் இருக்கு. ஆனால் கருத்து தான் காணாமல் போயிருக்கு! :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..