நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 14, 2021

நம்பிக்கை..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
*
படித்ததில் பிடித்தது..
***

இந்தப் பதிவினை
நண்பர் தஞ்சை ஞானசேகரன்
தனது Fb ல் பகிர்ந்திருந்தார்..

துரை ராஜேந்திரன்
என்பவரைக் காட்டியது பதிவு..
அழகான விஷயத்தைப் பதிவு செய்த அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

சிறு சிறு திருத்தங்களுடன்
நமது தளத்தில்..

நம்பிக்கையுடன் பயணிப்போம்!..
***

ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மகனை  - கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர் பெற்றோர்.

ரயிலில் செல்லும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு ரயிலிலேயே திரும்புவார்கள்..

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், ந்தச்சிறுவன் 

நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்.. ந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.

சிறிது யோசனைக்குப்  பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற,

எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்

எனறான் அந்த சிறுவன்.

ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக 

" மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது!.."

என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.

பயணத்தின் சந்தோஷத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.

முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், 

மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.

அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தை உண்டாக்கியது.

இப்போது சிறுவனுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. வயிறு வலிப்பது போல் தெரிகிறது.

ரயிலின் வேகத்தைப் போல இதயம் தடதடவெனத் துடிப்பது புரிகிறது.

ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் வருகிறது.

அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது  தந்தை, சட்டைப் பையில் வைத்த கடிதம் நினைவுக்கு வருகிறது.

நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான்,

அதில்,

பயப்படாதே மகனே.. நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்!.. - என்று எழுதி இருந்தது.

கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.

பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.

பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.

இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.

மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.

நோயை விட, அது குறித்த அச்சம் தான் பலரை வீழ்த்துகின்றது.

எல்லோரும் இறைவனை நம்புகிறோம்.

நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் - என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.

 இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பிய போது, நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை வைத்திருக்கின்றான்..

அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன்!.. -  என்று எழுதப்பட்டு இருக்கின்றது.

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்பவன் கண்ணன். 

இருளுக்குப் பிறகு வெளிச்சமும்,

இன்னலுக்குப் பிறகு மகிழ்ச்சியும்

தருவதாக இறைவன் சொன்ன சத்திய வார்த்தைகளை நினைத்துக் கொள்வோம்.

பயமும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம்.

பயத்தையும் அச்சத்தையும் தவிர்த்து மது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவோம்..

நம்பிகையுடன் இருப்போம்... 



நம சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க..
இமைப் பொழுதும் நம் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

7 கருத்துகள்:

  1. ஆம்.  நானும் படித்து ரசித்தேன்.  ஒவ்வொரு குரூப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.  தந்தை என்றும் மகனைக் கைவிட மாட்டார்.

    பதிலளிநீக்கு
  2. கதை அருமை துரை அண்ணா.

    நிஜமாகவே இப்போதைய சூழல் பயம் தரும் சூழல். நானும் அதில் அடக்கம். பயந்து கொண்டுதான் இருக்கிறேன் அந்தச் சின்னப்பையன் போல. நம்பிக்கைதரும் கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்போதைய சூழலுக்கு மட்டுமின்றி எப்போதைக்கும் பொருந்திப் போகும் கதை அருமை. இறைவனை நம்பிவிட்டால் எதையும் எளிதாகக் கடந்துவிடலாம் மன உறுதியுடன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. எப்போதுக்கும் பொருந்தி வரக் கூடியது. எனக்கும் வந்து கொண்டே இருக்கிறது இது. முகநூலிலும் படித்தேன். என்றாலும் அந்தச் சிறுவனின் மனோநிலைதான் நமக்கு! ஆண்டவன் நம் அருகில் எப்போதும் இருப்பதை நாம் மறக்காமல் இருந்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
  5. நிறைய குழுக்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கதை. நானும் படித்து ரசித்தேன்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  6. நெல்லை உலகு என்பவர் பகிர்ந்து இருந்தார் முகநூலில் நானும் படித்தேன்.
    நம்பிக்கை அளிக்கும் கதை.
    இறைவன் நம்முடன் இருக்கிறார், என்றும் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..