நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 21, 2017

பரிமள யாமளை

இன்று மங்கலகரமான ஆடி வெள்ளி..

இன்றைய பதிவில்
அழகுக்கு அழகான அம்பிகையின் தரிசனம்..


உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற  மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமன்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே..(001)

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோம:அமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (004)


ஸ்ரீ காந்திமதி - நெல்லை
சுந்தரி எந்தைத் துணைவி என்பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!.. (008)

நின்றும் இருந்தும் கிடந்தும்  நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே!..(010)

ஸ்ரீ உண்ணாமுலையாள் - அண்ணாமலை

ஸ்ரீ பிரகதாம்பாள் - புதுக்கோட்டை
கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது  உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவயத்து நான்முன் செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவிஏழையும்  பூத்தவளே!.. (012)

பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே நின்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!.. (013)

ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர்
தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும்  செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!.. (015)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!.. (016)

பண்ணளிக்கும் சொல் 
பரிமள யாமளைப் பைங்கிளியே
நின் திருவடிகள் சரணம்.. சரணம்..


ஓம் சக்தி ஓம்..
***  

18 கருத்துகள்:

  1. அம்பிகையின் தரிசனம் கண்டேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தரிசனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பரிமள யாமளை. என்ன அழகான பெயர்.

    __/\__

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அம்பிகையின் அழகு தோற்றம் காண் கருவிலி சர்வாங்க சுந்தரி கோவிலுக்குப் போக வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இன்னும் கருவிலி திருக்கோயிலைத் தரிசனம் செய்ததில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அபிராமி அந்தாதி பகிர்வு அருமை.
    படங்கள் அழகு.
    அபிராமி அம்மையின் திருவடி சரணம்.
    வெள்ளிக்கிழமை சிறப்பு பதிவை வெள்ளிக் கிழமை படிக்க முடியவில்லை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகிய பெயர். படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. உங்களுடன் நாங்களும் வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  9. பெயர் அழகு! இவ்வுலகின் தாயும் அழகு....விவரங்கள், படங்களும் அழகு!!!!

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சார்! அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரை நானும் முகநூலில் சற்று விரிவாக வெளியிட்டு வந்தேன். 18 பாடல்களில் நிற்கிறது. சிறிய தொய்வு. உங்கள் படங்கள் கூடுதல் சிறப்பு

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..