நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 26, 2015

நாட்டியாஞ்சலி 2015

மகா சிவராத்திரி விழாவையொட்டி, 17/2 செவ்வாய்க் கிழமை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கிய பிரகன் நாட்டியாஞ்சலி விழா கடந்த 23/2 திங்களன்று நிறைவு பெற்றது.


பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் - ஆகியவை சார்பில் நடைபெற்ற
இந்த விழா, செவ்வாய் - அன்று மாலை  மங்கல இசையுடன் தொடங்கியது.


தொடர்ந்து -

சென்னை மயூரி நடனாலயா, ஸ்ரீதேவி நடனாலயா, பெங்களூரு நடன கலா கிராமம், தானே நித்திய கலா நிகிதன், சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அஞ்சனா குப்தா குழுவினர் உள்பட மொத்தம் 15 குழுவினர் தமது நடன நிகழ்ச்சிகளை புதன்கிழமை அதிகாலை வரை நிகழ்த்தினர்.
17/2 செவ்வாய்







அதன் பின் - இந்த விழா தொடர்ந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நாள்தோறும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

பிரஜன் நாட்டியாஞ்சலியில் அறுநூற்றுக்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வுகளில் கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி, ஷத்ரியா - ஆகிய நடனங்கள் இடம்பெற்றன.
18/2 புதன்




19/8 வியாழன்





20/2 வியாழன்






21/2 வெள்ளி












ஏழு நாட்கள் நடைபெற்ற பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் -

தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவ - மாணவியர் - நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
மேலும் -

புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, குவாஹாத்தி, புவனேஸ்வர் - என நாட்டின் பிறபகுதிகளிலிருந்தும்,
மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா - என கடல் கடந்த நாடுகளிலிருந்தும்

- புகழ் பெற்ற நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர். 

அழகிய படங்களை FB-ல் வழங்கிய -
அன்பின் குணா அமுதன் அவர்களுக்கும் 
அன்பின் H. முகம்மது ஜாவீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!..

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை
தில்லையுள் கூத்தனை தென்பாண்டி நாட்டானை
தென்னாடுடைய சிவனை
எந்நாட்டவர்க்கும் இறைவனை

பாட்டும் பரதமுமாகப் பரவித் தொழுது
கண் களிக்கச் செய்த அனைவரும்
நல்லருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!..  

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே!.. (4/23)
-: அப்பர் பெருமான் :-

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

29 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான நாட்டிய முத்திரைகள் அழகாய் படம் பிடித்ததுக் காட்டியதற்கு நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நாம் நேரில் பார்க்கும் போது கூட இந்த அளவுக்குத் துல்லியமாகக் கண்டு மகிழும் வாய்ப்புகள் குறைவு..

      நேர்த்தியான நடன நிகழ்ச்சியை சிரத்தையுடன் படம் பிடித்து பதிவில் வழங்கிய புகைப்படக் கலைஞர்களுக்கு நன்றி..

      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நான் நேரில் கண்டேன். தங்கள் பதிவில் அதைவிட அருமையாக கொடுத்துள்ளீர்கள்.தாங்கள் வாழ்க. தங்கள் தொண்டு தொடர்க. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நாட்டியாஞ்சலியை நேரில் கண்டவர் கொடுத்து வைத்தவர்கள்.
      நேர்த்தியான நடன நிகழ்ச்சியை சிரத்தையுடன் படம் பிடித்து பதிவில் வழங்கிய புகைப்படக் கலைஞர்களுக்கு நன்றி..

      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எங்கள் ஊரிலும் நடக்கும் ஒவ்வொரு சிவன் ராத்திரிக்கும். இந்த முறை ஊரில் இல்லை மதுரையில் இருந்தேன்.

    படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சிறப்பாக படம் பிடித்த கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமை நண்பரே புகைப்படங்கள் அனைத்தும் அட்டகாசம், எடுத்தவருக்கு ஒரு சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      நிகழ்ச்சியினை படமெடுத்த நண்பர்களைப் பாராட்டிய தங்களுக்கு நன்றி..

      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தஞ்சை நாட்டியாஞ்சலி பற்றிய படங்களுடன் ஆன பதிவு நிறைவைத்தருகிறது. ஆனால் தில்லையில் இந்த வருட நாட்டியாஞ்சலிக்கு எதிர்ப்பு என்று கேள்விப்பட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தில்லையில் இந்த வருடம் வழக்கமாக நாட்டியாஞ்சலி நடத்தி வரும் அறக் கட்டளையினரும் தில்லை தீக்ஷிதர்களும் தனித்தனியே நடத்தியதாக செய்திகளைப் படித்தேன். இடையில் நாட்டியாஞ்சலியை எதிர்த்து பிரச்னை கிளம்பியிருக்கின்றதாம்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கடந்த வருடம் சென்றோம், ரசித்தோம். இவ்வருடம் செல்லாத குறையை தங்களின் பதிவு நேர்செய்துவிட்டது. நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  7. அற்புதமான படங்கள்.... நேரில் கண்ட உணர்வு ஐயா...

    நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நாட்டியாஞ்சலி பற்றிய விபரங்களும் புகைப்படக் கலைஞர்களின் நேர்த்தியான படங்களும் நேரில் விழாவைக் கண்டு களித்த உணர்வை ஏற்படுத்தின. அறுநூறுக்கும் அதிகமான கலைஞர்கள் பங்கேற்றனர் எனும் போது இதன் பிரும்மாண்டம் புரிகிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். ஒருவழியாகத் தாங்கள் சொன்னது போல் கிளிக் செய்து உறுப்பினர் ஆகி விட்டேன். இனி முடிந்தெபோதெல்லாம் வருவேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. அனைத்துப்புகைப்படங்களும் மிக மிக அழகு! இவற்றைக் காணத்தந்தமைக்கு உங்களுக்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      சிறப்பான நாட்டியாஞ்சலியை அழகுற படமெடுத்து வழங்கியவர்களுக்கு நமது நன்றி..

      தங்கள் இனிய வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  11. நாட்டியாஞ்சலி பற்றிய தகவல்களுக்கு நன்றி. படங்கள் மிக மிக அழகு. அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  12. என் கணினியில் ஏதோ பிரச்சனை. ஆகையால் 3 மூன்று நாட்களாக மற்றவர் தளத்தை திறந்தால் உடனேயே போய்விடுகிறது. பதிவுகளை படிக்க முடியவில்லை. சில தளங்கள் திறக்கின்றன. உங்கள் தளம் பலமுறை முயன்றும் முடியவில்லை. இப்போது கொஞ்சம் சரி செய்து கொடுத்தார்.

    600 நடனக் கலைஞர்கள் ஆஹா...அற்புதமான விருந்து ஒரு வாரத்திற்கு.
    இதுவரை கண்டதில்லை. தங்கள் வாயிலாக கண்டு களித்தேன்.

    புகைப்படக்கலைஞர்க்கு பாராட்டுக்கள்.

    தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கணினியில் பிரச்னை.. அதனால் தான் பதிவுகள் வரவில்லையா!..
      சீக்கிரம் சரியாகிட வேண்டுகின்றேன்..

      தங்கள் வருகை - கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. மிகவும் அழகிய படங்கள்...... படம் எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. நான் உங்கள் தளத்திற்கு வருவது முதல் தடவையாகும்.படங்கள் அனைத்தும் மிக அருமை, நீங்கள் பகிர்ந்த விதமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. நல்வரவு..
      தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  15. காட்சிகளை நேரில் கண்ட உணர்வு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையினால் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..