நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வைத்தீஸ்வரன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைத்தீஸ்வரன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 28, 2024

புள்ளிருக்கு வேளூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
ஞாயிற்றுக்கிழமை

தற்சமயம் எனக்குக்
கை விரல்களில் வலி.. 
தட்டச்சு செய்வதில் 
பிரச்னை என்றாலும் நற்பணியாகிய இதைச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி..
**
ஸ்ரீ தையல் நாயகி சமேத
வைத்தீஸ்வரன் கோயில்
தரிசனம்

மயிலாடுதுறை
சந்திப்பில்




இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை
ஸ்ரீ தையல் நாயகி

தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 













திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்  உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 2/43/6
-: திருஞானசம்பந்தர் :-

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***