நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
ஞாயிற்றுக்கிழமை
தற்சமயம் எனக்குக்
கை விரல்களில் வலி..
தட்டச்சு செய்வதில்
பிரச்னை என்றாலும் நற்பணியாகிய இதைச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி..
**
ஸ்ரீ தையல் நாயகி சமேத
வைத்தீஸ்வரன் கோயில்
தரிசனம்
மயிலாடுதுறை
சந்திப்பில்
இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை
ஸ்ரீ தையல் நாயகி
தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு
திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 2/43/6
-: திருஞானசம்பந்தர் :-
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***














