நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 14, 2025

அறம் நாலு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 2
வெள்ளிக்கிழமை


தனதானத் தனதான தனதானத் ... தனதான

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...
 குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...  தருவாயே

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் : -
( நன்றி கௌமாரம் )

மீண்டும் மீண்டும் 
இறவாமல் பிறவாமல் இருப்பதற்கு வரம் தந்து

என்னை ஆளுகின்ற சற்குருவாகவும்,

மற்றெல்லா வகையிலும் துணை ஆகி பெரு வாழ்வினையும், 
 
முக்தி எனும்  நிலையான 
வீட்டையும் தந்தருள்வாயாக.

குறமகளாகிய வள்ளி நாச்சியாரின் மணவாளனே,

குகனே புகழுடைய குமரேசனே 

அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற நான்கினையும் உபதேசித்து அருள்பவனே,

அவிநாசிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே..
**

உலக வாழ்வினுக்கான
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினையும் தந்து இவற்றின் வழி நிற்போர் தமக்கு வீடு பேறு எனும் முக்தியினையும் அருள்பவன் முருகப் பெருமான் என்பதை இத்திருப்புகழ் பாடலின் வழியாக நமக்கு உணர்த்துகின்றார் அருணகிரியார்..

முருகா முருகா..
முருகா முருகா..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜனவரி 20, 2023

தை வெள்ளி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 6
முதல்
 வெள்ளிக்கிழமை


அம்பிகையின் 
திருப்பாதங்களில் 
நமது பிரார்த்தனை..

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடை மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.. 24


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***