நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவேங்கடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவேங்கடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 06, 2026

சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 திங்கட்கிழமை



ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஹரி ஓம்
***

சனி, அக்டோபர் 14, 2023

திருவேங்கடம்



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 27
நான்காவது
சனிக்கிழமை

இன்று 
மஹாளய அமாவாசை

திருவேங்கட தரிசனம்

கிழக்கே திருமுகம் காட்டி 
ஆனந்த விமானத்தின் கீழ் நின்ற திருக்கோலம்..


தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன்  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ்  விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1028

மானேய் கண் மடவார்  மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்  திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029


கொன்றேன் பல்லுயிரை  குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு  இனிது ஆக உரைத்து அறியேன்
குன்றேய் மேகம் அதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1030

எப் பாவம் பலவும்  இவையே செய்து இளைத்தொழிந்தேன் 
துப்பா நின் அடியே  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ்  திருவேங்கட மா மலை
என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1032

தெரியேன் பாலகனாய்  பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின்  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம் பொழில் சூழ்  கன மா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034


பற்றேல் ஒன்றும் இலேன்  பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1036
-: திருமங்கையாழ்வார் :-
 நன்றி நாலாயிர திவ்யப்ரபந்தம்
*

தஞ்சை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் தரிசனம்
 


ஓம் நமோ வேங்கடேசாய
**

 ஓம் ஹரி ஓம்
***

சனி, அக்டோபர் 15, 2022

ஸ்ரீ வேங்கடேசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஸ்ரீ சுபகிருது வருடம் 
புரட்டாசி மாதத்தின்
நான்காவது 
சனிக்கிழமை

இன்றைய தரிசனம்

திருவேங்கட மாமலை


ஸ்வாமி
திருவேங்கடநாதன்

தாயேதந்தை என்றும் தாரமே கிளைமக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1028

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

மேற்கண்ட
திருப்பாசுரங்கள்
இரண்டிற்கும்
நான் என்னளவில்
பொருள் கண்டிருக்கின்றேன்..


தாய் தந்தை சுற்றம் மனைவி மக்கள
எனும்  இந்த 
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாம் நீ தந்தவை.. 

என்றாலும் 
இவையெல்லாம் 
உடைத்து விட முடியாத - 
விடக் கூடாத சங்கிலிகள் 
என்கின்றன
உலகியல் நூல்கள்..

அறியாப் பிள்ளையாய்
பிறந்ததனால் நீதி நெறி 
எனும் புரிதல்  இல்லாமல் போனது..  

பால வயது விடலைப் பருவம் எல்லாமும்  
 விதியின் விளையாட்டுகள்!.. 

விதி தான் வலியது 
சொல்லவும் வேண்டுமோ! ..

எத்தனை எத்தனை பிழைகள்
எத்தனை எத்தனை குறைகள் 
எண்ணவும் தெரியவில்லை..
எண்ணிக்கையும் தெரியவில்லை.. 

 காம குரோத லோப மோகம் 
என, எதிலும் வீழ்ந்ததில்லை..

மது மாந்தியதில்லை..
சூதாடித் தொலைந்தது இல்லை..
மனை மாறிப் புகுந்ததில்லை..
பொய் கொண்டு
சொன்னதில்லை..

என்றாலும்,
உறவுகளுக்கு என்று உழைத்து 
ஓய்ந்த போது தான்
ஏழையாகவே இருப்பதை 
உணர்ந்தேன்.. 

எல்லாம் விழலுக்குத் தானா?.. 
அருளுக்கு என  எதுவுமே இல்லையா!.. 
என்று, அயர்ந்த நேரத்தில் 
செல்வர்க்கு அழகு 
செழுங்கிளை தாங்குதல் 
என்றொரு நீதி இருப்பதையும் 
அறிந்தேன்..

அந்த நீதியின் படி
இயன்ற அளவுக்கு 
நடந்ததனால் - 
அதுவும் நீ வகுத்ததே!..
என்ன பலன் என்பது 
உனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியம்..

இந்நிலையில்
பொருளைத் தேடி திரிந்தும்
ஏழையாகத் தான் 
இருக்கின்றேன் ஐயா!.. 

ஆனால்,
உன் அருளைத் தேடுவதில் 
ஏழையாகி விட மாட்டேன்..

ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம் 
கூர்த்த நயனக் கொள்ளையில்  பிழைத்தும் 
பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்

நீ விதித்தபடியான 
சூழ்நிலைகளில்
 நீ விதித்தபடியே
வாழ்ந்து விட்டு  இப்போது உனது 
அருளை நாடி வந்திருக்கின்றேன்..

வினையின்படி
சொல்லால் செயலால்
சிந்தையால்  
சரியோ பிழையோ என்னை 
அன்புடன் பொறுத்தருளல் 
வேண்டும்..


யானைகள் கூட்டமாக சுற்றித் திரிகின்ற
வனங்களுடன் பசுமையான மூங்கில்
காடுகளும் நறுமணம் கமழும்
பூஞ்சோலைகளும் 
நிறைந்திருக்கும் திரு வேங்கட 
மாமலையை உடையவனே..


அந்தரங்கம் அறிந்த
அந்த ரங்கனே
என்னைப்
பொறுத்தருள்வாய்..

ஸ்ரீ ஹரி பரந்தாமனே 
அடியேனையும் 
ஆண்டருள்வாய்!..
***
(அழகிய படங்களுக்கு 
நன்றி : இணையம்)

காட்சித் தொகுப்பு
காணொளி
தஞ்சையம்பதி

திருப்பாசுரத்தைப் பாடி 
வைத்தோருக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..


ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***