நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருஅரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருஅரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 27, 2018

பவித்ரோத்ஸவம்

சில தினங்களுக்கு முன் (25/ஆகஸ்ட்)
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
தன்னுடைய ஆன்மிக பயணம் எனும் தளத்தில்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!..
பவித்ரோத்ஸவம் - பூச்சாண்டி சேவை!...

என்னும் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்...

அந்தப் பதிவினை -


அந்தப் பதிவினில் சொல்லப்பட்டிருந்த தகவல்கள் மிக மிக மகிழ்ச்சியளித்தன...

ஜேஷ்டாபிஷேகம் - பற்றி ஓரளவு அறிந்திருக்கின்றோம்...

ஸ்ரீ நம்பெருமாள் - திருஅரங்கம்.

ஆனால்,
இந்த பவித்ரோத்ஸவம் - என்று
செய்தி வரும் போதெல்லாம் ஒன்றும் புரியாது...

பட்டு நூல் கொண்டு ஆன - மாலைகளுடன்
ஸ்ரீ நம்பெருமாளின் படங்களை எங்காவது பார்க்கும்போது
மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...

இது ஏன்!.... பட்டு நூல் மாலை ஸ்வாமிக்கு!?...

மனம் வழக்கம் போல வியப்படையும்...
அத்துடன் களைத்துப் போகும்...

ஏனெனில்- இங்கே யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது!?..

ஆனாலும் ,

நம்பெருமாள் அதனையும் தெரிந்து கொள்ளச் செய்தான் -
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வழங்கிய பதிவின் மூலமாக!...

மறுநாள் - (26 ஆகஸ்ட்)
கையிலிருந்த நுண்ணலைபேசியை
குடைந்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த அதிர்ச்சி...

Facebook ல்
அரங்கனின் அன்பர்களால்
நம்பெருமாளின் பவித்ரோத்ஸவம்
ஐந்தாம் திருநாள் புறப்பாடு காணொளி வெளியிடப்பட்டிருந்தது...

ஆகா!.. பவித்ரம்.. பவித்ரோத்ஸவம்!.. - என, மனம் ஆனந்தக் கூத்தாடியது...

அரங்கனின் அடியார்கள் -
திவ்ய தரிசனம் - எனும் பெயரில்
திவ்ய தேசங்கள் பலவற்றிலும் நிகழும்
மகத்தான வைபவங்களின் திருக்காட்சிகளை
பலரும் அறியத் தந்து கொண்டிருக்கின்றனர்...

அரங்கனின் அடியார் தமக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!

யான் பெற்ற இன்பமாக
அந்தக் காணொளியினையும் காட்சிகளையும்
இன்றைய பதிவினில் தந்துள்ளேன்....


பவித்ர மாலையுடன்
பரமனின் திருக்கோலங்கள்..

ஸ்ரீ கோதண்டராமர் - திருப்பதி
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கட மாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள்
வானமாமலை
ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருஅல்லிக்கேணிக் கண்டேனே.. (1069)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி - ராஜ மன்னார்குடி
ஸ்ரீ தலசயனப்பெருமாள் - திருக்கடல்மல்லை
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என்நாயகனே.. (1100)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் - திருவதிகை
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றா முன்துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள்தந்திடு என்எந்தை பிரானே..(1549)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ அரங்கநாதன்
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டது தென்னரங்கத்தே.. (1406)
-: திருமங்கையாழ்வார் :-
***
அடியார் அனைவரையும் 
அரங்கன் 
ஆதரித்தருள்வானாக!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

புதன், செப்டம்பர் 18, 2013

திருஅரங்கம்

நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுள் முதலாவதான திருத்தலம்.

மூன்று பிரம்மோத்ஸவம் (சித்திரை, தை, மாசி) நிகழும் திருத்தலம்.

பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே!..

திருப்பாற்கடல், பரமபதம் - தவிர்த்த ஏனைய திவ்ய தேசங்களுள் தெற்கு நோக்கிய திருத்தலம் - திரு அரங்கம். 

புண்ணிய பாரதத்தின் பிரம்மாண்டமான திருக்கோயில்களில் ஒன்றென விளங்கும் திருத்தலம். 

மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டவன் திரு அரங்கன்.

சித்திரைத் திருவிழாவில் அரங்கனின் திருக்கோலம்

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகணம்மா அரங்கமாநகருளானே!..

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முத்துப் பல்லக்கில் வந்த கோதை நாச்சியார்,

மனம் கொண்ட மணாளனின் ஊர் என, ஸ்ரீரங்கத்தின் எல்லையில் - பல்லக்கில் இருந்து இறங்கி,

பல்லோரும் எதிர்கொண்டு வணங்கி வரவேற்க - பூம்பாதங்கள் சிவக்க நடந்து வந்து -

திருக்கோயிலினுள்  ஏகி - அரங்கனுடன் கலந்தாள் - எனக் குறிப்பர்.

தெற்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் உள்ள மூலவரின் ஸ்ரீவிமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. தங்கத்தால் வேயப்பெற்றது. 

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை துயிலுமாகண்டு
உடலெனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!..

வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதப்படும். 

பிரம்மாண்டமான இந்தத் திருவிழாவில் ஐந்து லட்சம் பக்தர்களுக்கும் மேல் திரண்டு வந்து பெருமாளை வணங்கி இன்புறுவர். 

ஆடிப்பெருக்கு அன்று சுவாமி காவிரிக் கரையில் அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். 

 

அங்கு  கங்கையினும் புனிதமாய காவிரிக்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்களை யானையின் மீது வைத்து,  நகர் வலமாக வந்து - ஆற்றில்  சீதனமாக மிதக்க விடுவார்கள்.

ஸ்ரீரங்கநாதனுக்கு சேவை செய்து அரங்கனின் திருவடிகளிலேயே மோட்சம் அடைந்த ஸ்ரீராமானுஜர்,  இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. உடையவரின் திருநட்சத்திரமான சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப் படுகின்றது. 

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம்  நடைபெறும்.

கைசிக ஏகாதசி எனப்படும் கார்த்திகையின் வளர்பிறை ஏகாதசியன்று இரவு  நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.

கம்பர், ஸ்ரீ ராமாயணத்தை  அரங்கேற்றம் செய்த தலம்.

அரங்கேற்றம் செய்தபோது, அங்கே கூடியிருந்த சிலர் - ராமாயணத்தில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை எதிர்த்தனர்.  ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். 

ஸ்ரீராமாயணம் அரங்கேறிய மண்டபம்
இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டி நரசிம்மரைத் தியானித்தார் - கம்பர்.

அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் ஆமோதித்து அருள - எதிர்த்தவர்கள் ஏதும் பேச இயலாது - அடங்கிப் போயினர். 

தமிழுக்குத் தலையசைத்து மகிழ்ந்த ஸ்ரீநரசிங்க மூர்த்தி - தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள சந்நிதியில் மேட்டழகிய சிங்கர் என வீற்றிருக்கின்றார். 

 

ஸ்ரீரங்கநாயகி தாயார் சந்நிதியில் - உற்சவ திருமேனியும்,  ஸ்ரீதேவியும், பூமாதேவியும் -  என  திருக்காட்சி தந்தருள்கின்றனர்.

அமுத கலசம் ஏந்திய கருடாழ்வார் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி, பிரம்மோற்ஸவத்தின்போது நெல் அளக்க பெருமாள் எழுந்தருளும் தான்ய லக்ஷ்மி சந்நிதி,  ஆண்டாள் சந்நிதி  - ஆகியன விசேஷமானவை. 


திருக்கோயிலே விசேஷம் எனும்போது - வெல்லத்தின் இந்தப் பக்கம் தான்  இனிப்பு என்பதைப் போன்றது  - 

திரு அரங்கத்தின் சிறப்புகளைக் கூறுவதும்!..

எனினும், பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன் அன்று பெருமாளைப் பற்றிச் சிந்திப்பதற்காகவே - 

சிறியேனின் இந்தப் பதிவு!..

பதிவினுள் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன.

அழகிய மண்டபங்களுடனும், அருள் பெருகும் சந்நிதிகளுடனும் விரிந்து பரந்திருக்கும் இத்திருக்கோயில் - 

இருபத்தோரு கோபுரங்களையும்  ஏழு திருச்சுற்றுகளையும் உடையது.

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!..

வைணவத்தில் கோயில் என்றால் 
திருஅரங்கம் தான்!..

வழிபடும் அடியவர்க்கு இன்னல் என்றால் 
ஓடி வந்து தீர்ப்பவன் 
திரு அரங்கன் தான்!..

திங்கள், டிசம்பர் 24, 2012

வைகுந்த ஏகாதசி

ஓம் நமோ நாராயணாய:

ம் ும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
ாராயா எும்ாமம்

அருள்மிகு அரங்கநாதப் பெருமான்
பச்சை மாமலைபோல் மேனி! பவளவாய் கமலச்செங்கண்!
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!...
                                                                                                              - தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளிவண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா! அரங்கமா நகருளானே!...
                                                                                                                                                   - தொண்டரடிப்பொடி ஆழ்வார்

வைகுந்த வாசனை மனத்துள் இருத்தி, பக்தியுடன் ஏகாதசி விரதம் அனுசரிப்பதால்  பாவம் செய்ய மனம் அஞ்சும்.  சலனமும் சஞ்சலமும் அடங்கி வைராக்கியம் பெருகும். எவ்விதத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் போக்கும் சக்தி பிறக்கும். 

அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் பெறமுடியும் . முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று  பரமேஸ்வரன் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  
அருள்மிகு வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில், 
தஞ்சாவூர்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடைவாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்தஎம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்...
                                                                                                                                                              - ிருமங்கஆழ்வார். 

காதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்டு, ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். 

''பாரணை'' என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம் பெறுதல் அவசியம் என்பர். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். 

உண்ணாநோன்பிருந்த வயிற்றுக்கு அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் நன்மை தருவன என்பது சித்த மருத்துவக் குறிப்புகள்.

சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்த பிறகு. சூரிய உதயத்திற்குள் சாப்பிட்டு முடித்து விட்டு, பகல் முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை பாராயணம் செய்தல் நலம்.
thanjavur14.blogspot.com
வைகுந்த ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவங்கள் நீங்கப் பெற்று வைகுந்தம் செல்லும் பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

ஓம் ஹரி ஓம்!