அம்பாசமுத்திரத்தில் -
அங்கிருந்து அவசர அவசரமாக
திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து
திருச்செந்தூர் பாசஞ்சரில் பயணித்து -
அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் ஸ்ரீ கள்ளர்பிரான் திருக்கோயில்..
மூலவர் - ஸ்ரீவைகுந்தநாதன்
ஒன்பது நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம்...
திருமூலஸ்தானமாகிய சந்திர விமானத்தின் கீழ்
நிறைந்து விளங்குகின்றது திருக்கோயில்....
இத்தகைய திருக்கோயில் வெள்ளையர்களின்
ஆக்ரமிப்பில் சிலகாலம் சிக்கியிருந்திருக்கின்றது..
இத்திருக்கோயிலை முழுமையாகத் தரிசிக்க
ஒரு நாள் போதாது என்பது உண்மை...
ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பின்
வந்து சேர்ந்த திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வழியில்
30 கி.மீ., தொலைவில் உள்ள திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....
திருச்செந்தூர் செந்தில்நாதனின் திருவருளால்
பேச்சு வரப்பெற்ற புண்ணியராகிய
ஸ்ரீ குமரகுருபரர் திருத்தோற்றமுற்ற திருநகர் - ஸ்ரீ வைகுண்டம்...
இவ்வூரில் தான்
நவ கயிலாயத் திருத்தலங்களுள் முதலாவதான
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயிலும்
நவ திருப்பதிகளுள் முதலாவதான
ஸ்ரீ வைகுண்டநாதன் திருக்கோயிலும் சிறப்புடன் திகழ்கின்றன...
இவ்விரண்டு திருக்கோயில்களும்
தென்பாண்டி நாட்டின் நவக்ரஹ தலங்களின் வரிசையில்
பித்ரு தோஷம் நீக்கும் சூரியனுக்குரிய தலங்களாக விளங்குகின்றன...
அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது..
அங்கிருந்து அவசர அவசரமாக
திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து
திருச்செந்தூர் பாசஞ்சரில் பயணித்து -
ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தபோது முன்னிரவு 7.30..
அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் ஸ்ரீ கள்ளர்பிரான் திருக்கோயில்..
ஆட்டோ ஒன்றில் பயணித்து திருக்கோயிலை அடைந்தோம்...
ஸ்ரீவைகுண்டம்
மூலவர் - ஸ்ரீவைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீவைகுந்தவல்லி
உற்சவர் - ஸ்ரீகள்ளர்பிரான்
ஸ்ரீதேவி, பூதேவி
மூலஸ்தானம் - சந்திர விமானம்
தீர்த்தம் - தாமிரபரணி, கலச தீர்த்தம்
தலவிருட்சம் - பவளமல்லி
இத்திருத்தலத்தை
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்..
அளவில் பெரியதான திருக்கோயில்...
ஐப்பசி மாத பௌர்ணமியன்று காலையில்
சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதங்களில் படிகின்றன...
திருமூலஸ்தானமாகிய சந்திர விமானத்தின் கீழ்
ஆதிசேஷன் குடை பிடிக்க மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி திகழ -
நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம்.
வாழ்வதற்கு வேறு வழியின்றி களவு செய்தவன் காலதூஷகன்.
இவன் தன் பிழைக்கு வருந்தியவனாக - அற்றார்க்கும் அலந்தார்க்கும் -
தான் திருடிய பொருள்களைப் பகிர்ந்து அளித்ததோடு
இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்கும் ஒரு பங்கு அளித்தான்.
களவு கை கொடுத்தது - அவனுக்கு...
யாரிடமும் பிடிபடாத தைரியத்தில் - ஒருநாள்
தன் கூட்டத்தாருடன் அரண்மனைக்குள் நுழைந்தான்.
அங்கே விரிக்கப்பட்டிருந்த வலையில்
உடன் சென்றோர் சிக்கிக் கொள்ள இவன் மட்டும் தப்பிப் பிழைத்தான்.
சிக்கிக் கொண்ட கள்வர்களை நல்லபடியாகக் கவனித்தனர் - காவலர்கள்.
அதன் விளைவு!..
காலதூஷகனின் இருப்பிடம் தேடி விரைந்தனர் - வீரர்கள்.
பீதியடைந்த காலதூஷகன் பெருமாளை வணங்கி விட்டு
சரணடைய முனைந்தான்.
அவனிடமிருந்து தானும் ஒரு பங்கினைப் பெற்றதால் -
ஸ்ரீவைகுந்தநாதன் - தானே காலதூஷகன் போல உருமாறி
அரண்மனைக்குச் சென்றான்.
அரசன் குடிமக்களைப் பரிபாலிக்கத் தவறிய பிழைதனை எடுத்துரைத்தான்.
அரசவையில் தைரியமாக வாதாடிய கள்வனின் பேரெழிலில் மனம் தடுமாறினான் அரசன்.
அரசனின் மயக்கத்தைப் போக்கி தன்னுரு காட்டியருளினான் - தயாபரன்.
அரசனும் கள்வனும் மற்றோரும் பெருமானைப் பணிந்து நின்றனர்.
பெருமாள் தனக்காக -
வாதாடிய வாஞ்சையைக் கண்டு மனம் திருந்திய கள்வன் -
அரச தண்டனையை ஏற்க முனைந்தான்.
அரசன் அவனை மன்னித்து விடுவித்தான்.
அரசன் மீண்டும் நல்லாட்சி தர முனைந்தான்..
கள்வனும் மனம் திருந்தி நல்வழியில் நடந்தான்..
இருவருமே பெருமாளின் திருவடிகளில் நற்கதியடைந்தனர்.
கள்வனுக்காக வந்ததனால் பெருமாளுக்கு -
கள்ளர்பிரான் எனத் திருப்பெயர்.
கள்ளர்பிரான் எனத் திருப்பெயர்.

ஆங்காங்கே விளக்கு வசதிகள் இருந்தாலும்
இரவு நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை..
திருச்சுற்றில்
ஸ்ரீ வைகுந்தநாயகியின் சந்நிதியும்
ஸ்ரீ சோரநாயகி சந்நிதியும்
தனித்தனியாக விளங்குகின்றன...
கலையழகு மிக்க எழிலார் சிற்பங்களுடன்திருச்சுற்றில்
ஸ்ரீ வைகுந்தநாயகியின் சந்நிதியும்
ஸ்ரீ சோரநாயகி சந்நிதியும்
தனித்தனியாக விளங்குகின்றன...
மனம் நிறைவான தரிசனம்...
ஆனாலும் மீண்டும் மீண்டும் தரிசிக்க மனம் விரும்புகின்றது...
தீர்த்தமும் திருத்துழாயும்
சித்ரான்னமும் வழங்கினான் - கள்ளர்பிரான்...
நிறைந்து விளங்குகின்றது திருக்கோயில்....
இத்தகைய திருக்கோயில் வெள்ளையர்களின்
ஆக்ரமிப்பில் சிலகாலம் சிக்கியிருந்திருக்கின்றது..
இத்திருக்கோயிலை முழுமையாகத் தரிசிக்க
ஒரு நாள் போதாது என்பது உண்மை...
இன்றைய பதிவில் -
திருவேங்கடத்தான் மண்டபத்தில் எடுக்கப்பட்ட
திருவேங்கடத்தான் மண்டபத்தில் எடுக்கப்பட்ட
ஒருசில படங்கள் - இதோ தங்களுக்காக!...
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தஎன் சிந்தையகங் கழியாதே என்னைஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்தசீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்குநீர் முகிலின்பவளம் போல்கனிவாய் சிவப்ப நீகாணவாராயே!..
(3795)
-: நம்மாழ்வார் :-
கள்ளர்பிரான் திருவடிகள் போற்றி...
ஓம் ஹரி ஓம்..
***






































































