இன்று கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாள்..
***
காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..
காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..
அவன் வாய் குழலில் அழகாக..
அமுதம் ததும்பும் இசையாக..
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து..
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்..
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்..
வருந்தும் உயிர்க்கு...
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் - இசை
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்..
இசையின் பயனே இறைவன் தானே!..
ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்..
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்..
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்..
திறந்த கதவு என்றும் மூடாது - இங்கு
சிறந்த இசை விருந்து குறையாது..
இதுபோல் இல்லம் ஏது சொல் தோழி!..
காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..
அவன் வாய் குழலில் அழகாக..
அமுதம் ததும்பும் இசையாக..
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து..
காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..
காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா..
கவிஞர் வாலி அவர்களின் இனிய பாடலுக்கு
இசையமைத்தவர் இளையராஜா..
பாடல் இடம்பெற்ற திரைப்படம்
ஒருநாள் ஒரு கனவு
பாடலைப் பாடியோர்
ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்,
ஹரிஹரன்..
விடியற்காலையில் விரும்பிக் கேட்கும்
பாடல்களுள் இதுவும் ஒன்று..
ஆனாலும்
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்
மனம் நெகிழ்ந்து கண்ணீர் ததும்பும்..
இறைவன் திருவடி நிழலில்
வாலி அவர்களின்
ஆன்மா இன்புற்றிருக்கட்டும்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *




