நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
சனிக்கிழமை
திருப்புகழ்
பழனி
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த ... தனதான
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் ... வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் ... வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி ... யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று ... பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை ... நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற ... பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் ... மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த ... பெருமாளே..
இத்திருப்புகழில்
ஸ்ரீ ராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் பயின்று வருகின்றனர்..
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
***
முருகா... முருகா.. ஓம் முருகா...
பதிலளிநீக்குஓம் சிவாய நாம ஓம்.
முருகா... முருகா.. ஓம் முருகா...
பதிலளிநீக்குஓம் சிவாய நம ஓம்.
பழனி ஆண்டவா உன் பாதங்கள் சரணம்.
பதிலளிநீக்கு