நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
திங்கட்கிழமை
அனைவருக்கும்
நல்வரவு
இன்று பால் கேசரி
தேவையானவை
ரவை 200 கி
பால் 390 மிலி
ரவை ஒரு பங்கு எனில் பால் மூன்று பங்கு
சர்க்கரை சுவைக்கு ஏற்ப
(அதிக சீனி வேண்டாம்)
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் 3
குங்குமப்பூ சிறிது
முந்திரி 10
உலர் திராட்சை 10
செய்முறை :
ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்..
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து சற்றே வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் ரவையை சேர்த்து இளந் தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறிது பாலுடன் குங்குமப் பூவைக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதி வந்ததும், அதில் ரவையை இட்டு கிளறவும். அத்துடன் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து கிளறி விடவும் .
ரவை நன்கு வெந்ததும், அதில் சீனியைச் சேர்த்து கிளறி, தளதள - என வருகின்ற போது, அதில் நெய் சேர்த்துக் கிளறவும்..
அடுத்து அதில் ஏலக்காய் பொடி வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான பால் கேசரி .
இது வழக்கமான கேசரி தான்..
வழக்கமாக சேர்க்கின்ற
தண்ணீருக்குப் பதிலாக பால்..
அவ்வளவே!...
பதிவுகளின் நடைமுறை மாறி இருப்பதால் முதல் பதிவாக பால் கேசரி...
மகிழ்ச்சி.. நன்றி..
நமது சமையல்
நமது ஆரோக்கியம்
ஓம் சிவாய நம
**
ஏனோ எனக்கு கேசரி பிடிப்பதில்லை. அல்வாவும் அவ்வளவு பிடிக்காது. ஆனால் சமீப காலங்களில் மதுரை பிரேம விலாஸ் அல்வா சாப்பிட நாக்கு ஆர்வம் காட்டுகிறது!!
பதிலளிநீக்குஓ.. இப்படியும் இருக்கின்றதா!..
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பால் கேசரி செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது. பால் விட்டு இவ்விதம் செய்ததில்லை. ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
பால் கேசரி செய்முறையும்,படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி